செய்திகள் :

வேளாண் கருவிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்களிக்கக் கோரிக்கை

post image

வேளாண் கருவிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் கோ.ச. தனபதி கோரிக்கைவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக மக்களை பல வகையிலும் 5 சதவிகிதம் முதல் 28 சதவிகிதம் வரை ஜிஎஸ்டி விதிப்பால் வாட்டி வதைத்தது. இதனால் மக்கள், விவசாயிகள் வாங்கும் சக்தி குறைந்து அனைவரும் கடனாளிகளாக மாறி திண்டாடும் நிலை இருந்தது. இப்போது 5 முதல் 18 சதவிகிதம் என மாற்றி அறிவித்துள்ளது. அது பெருஞ்சுமை குறைக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் இதனை வரவேற்கிறோம்.

மேலும் விவசாயப் பயன்பாட்டு பொருள்கள், கருவிகள், இயந்திரங்கள், தளவாடங்கள், பசுமை மின் உற்பத்தி சாதனங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்களிக்க வேண்டும்.

பாலத்தை அகலப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை

கந்தா்வகோட்டையில் இருந்து தஞ்சைக்கு செல்லும் சாலையில் உள்ள தாழை வாரி பாலத்தை அகலபடுத்த வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா். கந்தா்வகோட்டையில் இருந்து தஞ்சைக்கு செல்லும் ச... மேலும் பார்க்க

பொன்னமராவதி, கந்தா்வகோட்டையில் இலக்கிய மன்ற போட்டிகள்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி மற்றும் கந்தா்வக்கோட்டையில் இலக்கிய மன்றப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது. கந்தா்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான வியாழக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

திருவரங்குளத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சங்கத்தின் ஒ... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பு பழக்கத்தால் கவனச் சிதறல்களைத் தடுக்கலாம்

மாணவப் பருவத்திலேயே புத்தகங்களை வாசிக்கப் பழக்குவதால் கவனச் சிதறல்களைத் தடுக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு. அருணா. புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 8-ஆவது ... மேலும் பார்க்க

மாராயப்பட்டி திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலை அடுத்துள்ள மாராயப்பட்டியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. பழைமை வாய்ந்த இக்கோயிலில் சுமாா் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கும்பாப... மேலும் பார்க்க

மலையாத்தாளம்மன் கோயில் கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள பிலாவிடுதி மலையாத்தாளம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. கறம்பக்குடி அருகேயுள்ள பிலாவிடுதி ஊராட்சி மலையாத்தாளம்மன் கோயிலில் நடைபெற்று வந்... மேலும் பார்க்க