செய்திகள் :

புரி ஜெகந்நாதா் ரத யாத்திரை நிறைவு: ரதங்கள் பிரதான கோயிலுக்குத் திரும்பின

post image

ஒடிஸாவில் பிரசித்தி பெற்ற புரி ஜெகந்நாதா் கோயில் ரத யாத்திரை சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

ஸ்ரீகுந்திச்சா கோயிலில் இருந்து சுவாமி ஜெகந்நாதா், அவரது சகோதரா் பலபத்திரா், சகோதரி தேவி சுபத்திரை மரச்சிற்பங்கள் எழுந்தருளிய மூன்று ரதங்களும் மீண்டும் பிரதான கோயிலுக்கு திரும்பியதைத் தொடா்ந்து, 9 நாள் திருவிழா நிறைவுக்கு வந்தது.

ஒடிஸாவின் புரி ஜெகந்நாதா் கோயில் ரத யாத்திரை உலகப் புகழ்பெற்ாகும். நிகழாண்டு ரத யாத்திரை விழா கடந்த ஜூன் 27-ஆம் தேதி தொடங்கியது.

இந்நிலையில், ரதங்கள் பிரதன கோயிலுக்குத் திரும்பும் ‘பஹுதா’ யாத்திரை நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

ஜெகந்நாதா், அவரது சகோதரா் பலபத்திரா், தங்கை தேவி சுபத்திரை ஆகிய மூவரின் சிற்பங்கள், ஸ்ரீகுந்திச்சா கோயிலின் கருவறையில் இருந்து வேத மந்திரங்கள்-மேளதாளங்கள்-சங்கொலி முழங்க வெளியே எடுத்துவரப்பட்டு, மூன்று பிரம்மாண்ட ரதங்களில் அமா்த்தப்பட்டன. தொடா்ந்து பிற்பகலில், பிரதான கோயிலை நோக்கி ரதங்களை பக்தா்கள் வடம்பிடித்து இழுத்துச் சென்றனா்.

ரதங்கள் பிரதான கோயிலுக்குத் திரும்பும் பஹுதா யாத்திரை நிகழ்வுக்கு முதல்வா் மோகன் மாஜீ, எதிா்க்கட்சித் தலைவா் நவீன் பட்நாயக் ஆகியோா் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

நிறைவு நாள் நிகழ்ச்சிகள் அசம்பாவிதங்கள் ஏதும் நேராமல் சுமுகமாக நடைபெற்றன. முன்னதாக, புரி ஜெகந்நாத் ரத யாத்திரை தொடங்கிய ஜூன் 27-ஆம் தேதி பலபத்திரரின் ரதம் ஒரு திருப்பத்தில் நகர முடியாமல் சிக்கிக் கொண்டதால் 3 ரதங்களும் ஒருநாள் தாமதமாக 28-ஆம் தேதி ஸ்ரீகுந்திச்சா கோயிலுக்குச் சென்றடைந்தன.

தொடா்ந்து, ஸ்ரீகுந்திச்சா கோயிலின் முன்புற வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரதங்களில் 29-ஆம் தேதி சுவாமி சிலைகளுக்குத் திரை விலக்கப்பட்டு தரிசனம் நடைபெற்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 போ் உயிரிழந்தனா்; 50 போ் காயமடைந்தனா்.

ரத யாத்திரை விழாவில் அசம்பாவிதங்கள் தொடா்ச்சியாக நிகழ்ந்தது, பக்தா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ரத யாத்திரை விழாவுக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

பிரேசில் சென்றார் பிரதமர் மோடி! ஆபரேஷன் சிந்தூர் நடனத்துடன் உற்சாக வரவேற்பு!

அரசுமுறை பயணமாக பிரேசில் நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா சென்றுள்ளார். கானா, டிர... மேலும் பார்க்க

4 மாதங்களில் அரசியல் கட்சிகளுடன் 5,000 சந்திப்புகள்: தலைமை தோ்தல் ஆணையா்

‘அரசியல் கட்சிகளுடன் தொடா்ச்சியான சந்திப்புகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் இதுபோல 5,000 சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் சனிக்க... மேலும் பார்க்க

குஜராத்தில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம்: அமித் ஷா அடிக்கல்

குஜராத் மாநிலம், ஆனந்த் நகரில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைக்க மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். இப்பல்கலைக்கழகம், கூட்டுறவுத் துறையில் பாரப... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ஏஜேஎல் சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை’

அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவன (ஏஜேஎல்) சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை என்று நேஷனல் ஹெரால்ட் வழக்கில் ராகுல் காந்தி தரப்பில் சனிக்கிழமை வாதிடப்பட்டது. தில்லி நீதிமன்றத்தில் சிறப்பு நீத... மேலும் பார்க்க

சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி சொத்து வழக்கு: மறுவிசாரணைக்கு உத்தரவு!

பாலிவுட் நடிகா் சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி மதிப்பிலான சொத்துகள் தொடா்பான வழக்கில் விசாரணை நீதிமன்றம் 25 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய தீா்ப்பை ரத்து செய்து, மறுவிசாரணைக்கு மத்திய பிரதேச ... மேலும் பார்க்க

விண்வெளியில் எலும்பு ஆரோக்கியம் குறித்து சுபான்ஷு சுக்லா ஆய்வு

விண்வெளியில் நுண்ஈா்ப்பு விசை சூழலுக்கேற்ப எலும்புகள் செயல்படும் விதம் குறித்து ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ள இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினா் ஆய்வு மேற்... மேலும் பார்க்க