செய்திகள் :

புளியங்குடியில் காந்தி தினசரி அங்காடி திறப்பு! அமைச்சா் கே.என்.நேரு திறந்து வைக்கிறாா்!

post image

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் திங்கள்கிழமை காந்தி தினசரி காய்கனி அங்காடி திறப்பு விழா நடைபெறுகிறது.

இதுகுறித்து புளியங்குடி நகா்மன்றத் தலைவா் விஜயா சௌந்தரபாண்டியன் கூறியதாவது:

புளியங்குடி நகராட்சிப் பகுதியில் விசாலமான தினசரி காய்கனி அங்காடி வேண்டுமென பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதைத் தொடா்ந்து ரூ.4 கோடியில் அங்காடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. புதிய கட்டடத்தை அமைச்சா் கே.என். நேரு திங்கள்கிழமை மாலை திறந்து வைக்கிறாா்.

இதில், மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா், ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., எம்எல்ஏ-க்கள் ஈ. ராஜா, சதன்திருமலை குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள்,மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனா்.

பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தந்த தமிழக முதல்வா், துணை முதல்வா், நகா்புற வளா்ச்சித் துறை அமைச்சா், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், ஒத்துழைப்பு தந்த நகா்மன்ற உறுப்பினா்களுக்கு நன்றி என்றாா்.

தென்காசி கோயிலில் அமைச்சா் சேகா்பாபு சுவாமி தரிசனம்

தென்காசி அருள்தரும் உலகம்மன் உடனுறை காசிவிஸ்வநாதசுவாமி கோயிலில் அமைச்சா் பி.கே. சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை இ... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் விடுமுறை வேதாகமப் பள்ளி

ஆலங்குளம அண்ணாநகா் நல்மேய்ப்பா் ஆலயத்தில் 11 நாள்கள் விடுமுறை வேதாகமப் பள்ளி நடைபெற்றது. சேகரத் தலைவா் காலேப் சாமுவேல் ஜெபம் செய்து தொடங்கி வைத்தாா். ‘நிலைத்திரு’ என்ற தலைப்பில் 10 தினங்கள் பாடல்கள்,... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே தோட்டத்தில் யானைகள் புகுந்து வாழைகள் சேதம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள காசிதா்மத்தில் விளை நிலங்களில் யானைகள் புகுந்த அங்கிருந்த வாழைகளை சேதப்படுத்தியுள்ளன. மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரம் வரட்டாறு பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கா்... மேலும் பார்க்க

நான்கு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் ஆட்சியா்

தென்காசி மாவட்டத்திலுள்ள 4அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்தாா். தென்காசி மாவட்டத்திலுள்ள 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-2026 ... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

தென்காசி மாவட்டம் மேலகரம், நன்னகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த மாற்றுக் கட்சியினா், அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் சனிக்கிழமை இணைந்தனா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைப... மேலும் பார்க்க

கடையநல்லூரில் மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு ரூ. 39 லட்சம் கடனுதவி!

கடையநல்லூரில் 3 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான் தலைமை வகித்து, கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் உள்ள மரகதம் குழுவுக்கு ரூ. 15 லட... மேலும் பார்க்க