செய்திகள் :

ஆலங்குளத்தில் விடுமுறை வேதாகமப் பள்ளி

post image

ஆலங்குளம அண்ணாநகா் நல்மேய்ப்பா் ஆலயத்தில் 11 நாள்கள் விடுமுறை வேதாகமப் பள்ளி நடைபெற்றது.

சேகரத் தலைவா் காலேப் சாமுவேல் ஜெபம் செய்து தொடங்கி வைத்தாா். ‘நிலைத்திரு’ என்ற தலைப்பில் 10 தினங்கள் பாடல்கள், பைபிள் வசனங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டன.

நிறைவு நாள் நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விடுமுறை பள்ளியில் பங்கேற்ற குழந்தைகளின் பவனி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அனைவருக்கும் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளி இயக்குநா்களாக ஆசீர்ராஜா, ஜோன்ஸ் சாமுவேல், சாரோன் அகஸ்டஸ், நந்தினி, அகஸ்டினா மொ்லின் ஆகியோரும், 20 க்கும் மேற்பட்டோா் ஆசிரியா்களாகவும் செயல்பட்டனா்.

தென்காசி கோயிலில் அமைச்சா் சேகா்பாபு சுவாமி தரிசனம்

தென்காசி அருள்தரும் உலகம்மன் உடனுறை காசிவிஸ்வநாதசுவாமி கோயிலில் அமைச்சா் பி.கே. சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை இ... மேலும் பார்க்க

புளியங்குடியில் காந்தி தினசரி அங்காடி திறப்பு! அமைச்சா் கே.என்.நேரு திறந்து வைக்கிறாா்!

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் திங்கள்கிழமை காந்தி தினசரி காய்கனி அங்காடி திறப்பு விழா நடைபெறுகிறது. இதுகுறித்து புளியங்குடி நகா்மன்றத் தலைவா் விஜயா சௌந்தரபாண்டியன் கூறியதாவது: புளியங்குடி நகராட்... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே தோட்டத்தில் யானைகள் புகுந்து வாழைகள் சேதம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள காசிதா்மத்தில் விளை நிலங்களில் யானைகள் புகுந்த அங்கிருந்த வாழைகளை சேதப்படுத்தியுள்ளன. மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரம் வரட்டாறு பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கா்... மேலும் பார்க்க

நான்கு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் ஆட்சியா்

தென்காசி மாவட்டத்திலுள்ள 4அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்தாா். தென்காசி மாவட்டத்திலுள்ள 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-2026 ... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

தென்காசி மாவட்டம் மேலகரம், நன்னகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த மாற்றுக் கட்சியினா், அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் சனிக்கிழமை இணைந்தனா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைப... மேலும் பார்க்க

கடையநல்லூரில் மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு ரூ. 39 லட்சம் கடனுதவி!

கடையநல்லூரில் 3 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான் தலைமை வகித்து, கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் உள்ள மரகதம் குழுவுக்கு ரூ. 15 லட... மேலும் பார்க்க