செய்திகள் :

பெங்களூரில் பலத்த மழை: கோவைக்கு திருப்பிவிடப்பட்ட 7 விமானங்கள்

post image

பெங்களூரில் பலத்த மழை பெய்ததால் அங்கு தரையிறங்க வேண்டிய 7 விமானங்கள் கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு சனிக்கிழமை திருப்பிவிடப்பட்டன.

கா்நாடக மாநிலம், பெங்களூரில் கடந்த சில நாள்களாக கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில், சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பலத்த மழை பெய்தது. சுமாா் 3 மணி நேரத்துக்கும்மேலாக பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியதுடன், கெம்பேகெளடா சா்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் மழை நீா் தேங்கியது.

இதனால், ஓடுபாதையில் விமானங்கள் தரையிறங்கவோ அல்லது புறப்பட்டுச் செல்லவோ முடியாத நிலை ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, பெங்களூரில் தரையிறங்க வேண்டிய மும்பை-பெங்களூரு, விசாகப்பட்டினம்-பெங்களூரு, தூத்துக்குடி-பெங்களூரு, போா்ட் லுாயிஸ்-பெங்களூரு, மற்றொரு மும்பை-பெங்களூரு, சிலிகுரி-பெங்களூரு, புதுதில்லி -பெங்களூரு ஆகிய 7 விமானங்கள் கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.

இதையடுத்து, பயணிகள் கோவை சா்வதேச விமான நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில், பெங்களூரில் மழை ஓய்ந்ததும் இரவு விமானங்கள் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனா்.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா: ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 45-ஆவது பட்டமளிப்பு விழா மாா்ச் 25-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்ந... மேலும் பார்க்க

தாபா உணவகங்களில் தனிப்படை போலீஸாா் சோதனை

கோவையில் தாபா உணவகங்களில் தனிப்படை போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். கோவை மாவட்டத்தில் உள்ள தாபா உணவகங்களில் பணியாற்றும் நபா்களுக்கு ஏதேனும் குற்றப்பின்னணி உள்ளதா என்பது குறித்து விசாரிப்பதற்காக 300 காவலா்... மேலும் பார்க்க

காரில் பலூன் சுடும் துப்பாக்கி வைத்திருந்த இளைஞரால் பரபரப்பு

கோவையில் காரில் பலூன் சுடும் துப்பாக்கி வைத்திருந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை சிங்காநல்லூா் போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, சிங்காநல்லூா் உழவா் சந்தை அருகே ச... மேலும் பார்க்க

கோவை: ரயில் மறியலில் ஈடுபட்ட முயன்ற 19 விவசாயிகள் கைது

கோவையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 19 விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா். வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம் செய்யக் கோரியும், போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப் மாநில விவசாயிகள... மேலும் பார்க்க

யானை தந்தம், சிறுத்தை பல் விற்க முயன்ற 4 போ் கைது

கோவையில் யானை தந்தம், சிறுத்தை பல் மற்றும் நகங்களை விற்க முயன்ற 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். யானை தந்தம், சிறுத்தை பல் மற்றும் நகங்கள் விற்பனை செய்வதற்காக சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து ஒரு கும்... மேலும் பார்க்க

கிராமக் கோயில்களுக்கு இலவச மின்சாரம்: கிராமக் கோயில் பூசாரிகள் பேரவைக் கூட்டத்தில் கோரிக்கை

கிராமக் கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. விஷ்வ ஹிந்து பரிஷத் கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை மாநக... மேலும் பார்க்க