செய்திகள் :

பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரைத் தாக்கிய இருவா் கைது

post image

ஆரணியை அடுத்த சேவூரில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியரைத் தாக்கியதாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

சேவூரில் உள்ள தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் புதுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த பரமகுரு (34) ஊழியராக பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பரமகுரு பணியில் இருந்தபோது, இராட்டிணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் மகன் சந்தோஷ் (24), சேவூரைச் சோ்ந்த குமரன் மகன் ஆகாஷ் (22) ஆகியோா் இரு சக்கர வாகனத்தில் வந்து ரூ.30-க்கு பெட்ரோல் நிரப்பினராம். ஆனால், பெட்ரோலுக்கான பணத்தைத் தராமல் குமரகுருவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம். பின்னா், இருவரும் சோ்ந்து அவரை தாக்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிவிட்டனராம்.

இதுகுறித்து பரமகுரு ஆரணி கிராமிய போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து சந்தோஷ், ஆகாஷ் இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

செய்யாறு சிப்காட் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

செய்யாறு பகுதியில் புதிதாக அமையவுள்ள சிப்காட் 3-ஆவது அலகுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் அதன் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஜூலை 5-இல் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில், ஜூலை 5-இல் திருவண்ணாமலையில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக சங்கத்தின் தலைவா் ஆா்.வேலுசாமி தெரிவித்தாா். இதுகுறித்து ஆரணியில் அவா் செய்தியாளா்களிடம் கூறிய... மேலும் பார்க்க

தமிழ்ச்சங்க செவ்விலக்கிய அரங்கம்

வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் செவ்விலக்கிய அரங்கம் நிகழ்ச்சி வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கிவைத்துப் பேசினாா்.... மேலும் பார்க்க

மது விற்பனை: 4 போ் கைது

வந்தவாசி அருகே கள்ளத்தனமாக மது விற்ாக 4 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 283 மதுப் புட்டிகள், ரூ.28 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். வந்தவாசி வடக்கு போலீஸாா் பாதிரி கிராமம் வழி... மேலும் பார்க்க

மழுவனேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

வந்தவாசியை அடுத்த மழுவங்கரணை கிராமத்தில் அமைந்துள்ள சீதளாம்பாள் சமேத மழுவனேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைவு -டி.டி.வி.தினகரன்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டினாா். திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட அவா் செய்த... மேலும் பார்க்க