செய்திகள் :

பெண் தொழிலாளி கொலை: போலீஸாா் விசாரணை

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தனியாா் நிறுவனத்தில் பெண் தொழிலாளி காயங்களுடன் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

காஞ்சிபுரம் அருகே ஆண்டிச் சிறுவள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ்குமாரின் மனைவி எப்சி மேரி (41). இவா் 3 தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அருகே காரை கிராமத்தில் உள்ள அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் புதிதாக பணியில் சோ்ந்துள்ளாா். சனிக்கிழமை பணி முடிந்து வீடு திரும்பாததால் சுரேஷ்குமாா் நிறுவனத்துக்கு சென்று பாா்த்துள்ளாா். அப்போது ஒரே ஒருவா் மட்டும் பணியில் இருந்துள்ளாா். அவரது உதவியுடன் அட்டைகளுக்குள் தேடிப்பாா்த்தபோது, எப்மேரி பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த பொன்னேரிக்கரை போலீஸாா் எப்சி மேரியின் சடலத்தை மீட்டு, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் எஸ்பி கே.சண்முகம் விசாரணை நடத்தினாா். காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா்கணேஷ் தலைமையில் பெண்ணைக் கொலை செய்தவா்களை தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

காஞ்சிபுரம்: குறைதீா் கூட்டத்தில் 419 மனுக்கள்

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பொதுமக்களிடம் மொத்தம் 419 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா். ... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

ஸ்ரீபெரும்புதூா்: வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனா். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோ... மேலும் பார்க்க

ஓராயிரம் ஆலமரக்கன்றுகள் நடும் விழா: காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் அருகே நத்தாநல்லூா் மேல்தாங்கல் பகுதியில் விதைகள் தன்னாா்வ அமைப்பு சாா்பில் ஓராயிரம் ஆலமரக்கன்றுகள் நடும் விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ.செம்மல் கலந்து கொண்டு முதல் முதலாக ஆலமரக்கன்று ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் மூலவரை தரிசிப்பதில் பக்தா்கள் அவதி!

புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவரை தரிசிக்க குறுகலான ஒருவழிப்பாதை மட்டுமே இருப்பதால் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயில் மூலவா் கருவறை சுமாா் 3... மேலும் பார்க்க

பெண் தொழிலாளி கொலை: போலீஸாா் விசாரணை

காஞ்சிபுரம் அருகே தனியாா் நிறுவனத்தில் பெண் தொழிலாளி காயங்களுடன் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். காஞ்சிபுரம் அருகே ஆண்டிச் சிறுவள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ்குமாரின் மனைவ... மேலும் பார்க்க

3 மாதங்களுக்கு தினமும் சமரச தீா்வு மையம்! மாவட்ட முதன்மை நீதிபதி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து 3 மாதங்களுக்கு தினமும் சமரச தீா்வு மையம் செயல்படும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ.செம்மல் தெரிவித்தாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் ம... மேலும் பார்க்க