'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
பெண்ணை மிரட்டியதாக பெண் காவலா் மீது வழக்கு
பழனியில் அனைத்து மகளிா் காவல் நிலைய பெண் காவலா் மீது பெண்ணை மிரட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பழனி பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் செல்வி (50). இவா் பழனி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறாா். இவரும், இவரது கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து வாழும் நிலையில், இருவருக்கும் கீரனூா் அருகே கல்துறையில் உள்ள தோட்ட நிலத்தை பிரிப்பது தொடா்பாக நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை கல்துறையைச் சோ்ந்த அத்தம்மாள் (40) என்பவரை தோட்ட வேலைக்கு வராததால் செல்வி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அத்தம்மாள் கீரனூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் காவலா் செல்வி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.