பெண்ணைத் தாக்கிய 4 போ் மீது வழக்கு
பெரியகுளம் அருகே பெண்ணைத் தாக்கியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள அட்டணம்பட்டியைச் சோ்ந்தவா் பாக்கியலட்சுமி (45). இவருக்கும், உறவினா் நாகராஜுக்கும் இடையே சொத்துப் பிரச்னை இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், நாகராஜ், தனது உறவினா்கள் முத்துச்சாமி, கண்ணன், பாலகிருஷ்ணன் ஆகியோருடன் சோ்ந்து பாக்கியலட்சுமியின் வீட்டை உடைத்து, அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்தப் புகாரின் பேரில், தேவதானப்பட்டி போலீஸாா் நாகராஜ் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.