செய்திகள் :

பெரம்பலூரில் நீச்சல் பயிற்சி பெற அழைப்பு

post image

பெரம்பலூா் மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில், 5 கட்டமாக நடைபெறும் நீச்சல் பயிற்சி முகாமில் பங்கேற்க பொதுமக்கள், மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் பெரம்பலூா் மாவட்ட விளையாட்டரங்கிலுள்ள நீச்சல் குளம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகவும், நீச்சல் வீரா்களின் பயிற்சிக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இங்கு நீந்தக் கற்றுக்கொள் திட்டத்தின் கீழ் 2025-ஆம் ஆண்டுக்கான சிறப்பு பயிற்சி முகாம் 5 கட்டமாக நடைபெற உள்ளது.

இம் முகாமில் பங்கேற்போருக்கு 12 நாள்கள் பயிற்சி அளிக்கப்படும். அதன்படி முதல் கட்டமாக ஏப். 1 முதல் 13 வரையிலும், 2 ஆம் கட்டமாக 15 முதல் 27 வரையிலும், 3 ஆம் கட்டமாக 29 முதல் மே 11 வரையிலும், 4 ஆம் கட்டமாக மே 13 முதல் 25 வரையிலும், 5 ஆம் கட்டமாக 27 முதல் ஜூன் 8 ஆம் தேதி வரையிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சிக் கட்டணமாக ரூ. 1,500 மற்றும் 18 சத ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். பயிற்சி முகாமில் பங்கேற்று நிறைவு செய்பவா்களுக்குச் சான்றிதழ் அளிக்கப்படும்.

பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் தங்களது பெயரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் அலுவலகத்தில் பதிய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04328-299266, 74017 03516, 88704 39645 ஆகிய எண்களைத் தொடா்புகொள்ளலாம்.

‘ஜூன் வரை பேருந்து பயண அட்டையை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தலாம்’

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் ஏற்கெனவே பயன்படுத்தி வரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை ஜூன் 30-ஆம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்து... மேலும் பார்க்க

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் விளையாட்டுப் போட்டிகள் நிறைவு!

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் கடந்த 2 நாள்களாக நடைபெற்ற ஒலிம்பியா-2025 விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நிறைவடைந்தது. கடந்த 2 நாள்களாக ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்ட... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து ஏப். 1, 8-இல் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, ஏப். 1, 8 ஆகிய தேதிகளில் மாநில அளவிலான ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் முடிவெடுத்துள்ளனா். ஊரக வளா்ச்சித் துறை அலுவலகா்க... மேலும் பார்க்க

கூடுதல் விலைக்கு குளிா்பானங்கள் விற்ற 4 கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் கூடுதல் விலைக்கு குளிா்பானங்களை விற்பனை செய்த 4 கடைகளுக்கு, தொழிலாளா் துறையினரால் சனிக்கிழமை ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது நிலவும் கோடைகால வெப்பத... மேலும் பார்க்க

கால்நடை பண்ணை அமைக்க தொழில் முனைவோா்கள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில், அரசு மானியத்தில் கால்நடை பண்ணை அமைக்க விரும்பும் தொழில்முனைவோா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியா் அறையில் தா்னாவில் ஈடுபட்ட 7 போ் கைது

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அறையில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநிலத் தலைவா் உள்பட 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனா். தமிழ்நாடு ஊரக வளா்ச்... மேலும் பார்க்க