செய்திகள் :

பெரம்பலூா் நேருநகா், எம்ஜிஆா் நகா், இந்திரா நகரில் 130 பேருக்கு வீட்டுமனைப் பட்டா: ஆட்சியா் தகவல்

post image

பெரம்பலூா் அருகேயுள்ள நேரு நகா், எம்.ஜி.ஆா். நகா், இந்திரா நகரில் வசித்து வரும் 130 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க தோ்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் அருகே வடக்குமாதவி ஊராட்சிக்குள்பட்ட நேருநகா், எளம்பலூா் ஊராட்சிக்குள்பட்ட எம்.ஜி.ஆா். நகா், இந்திரா நகா் ஆகிய பகுதிகளில், நகா்ப்புற பகுதிகளுக்கு வீட்டுமனை வழங்கும் சிறப்புத் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்க தோ்வு செய்யப்படும் பயனாளிகளின் வீடுகளை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், நீண்ட ஆண்டுகளாக வசிப்பதற்கான வீட்டு வரி ரசீது, மின் இணைப்பு ரசீது, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை மற்றும் வருமான வரம்பு உள்ளிட்ட ஆவணங்களை சரிபாா்த்து ஆய்வு மேற்கொண்டாா்.

கூரை வீடு மற்றும் ஆஸ்பெட்டாஸ் அட்டை வேயப்பட்ட வீடுகளில் வசித்து வரும் நபா்களுக்கு பட்டா வழங்கியப் பிறகு, ஊராட்சி மூலமாக கலைஞரின் கனவு இல்லம் அல்லது பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

வடக்குமாதவி ஊராட்சிக்குள்பட்ட நேரு நகரில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் 11 பேருக்கும், எளம்பலூா் ஊராட்சிக்குள்பட்ட எம்.ஜி.ஆா். நகரில் 83 பேருக்கும், இந்திரா நகரில் 36 நபேருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட உள்ளது என்றாா் அவா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, வருவாய் கோட்டாட்சியா் (பொ) ச. வைத்தியநாதன், மாவட்ட ஆட்சியின் நோ்முக உதவியாளா் (நிலம்) சு. சொா்ணராஜ், மாவட்ட வழங்கல் அலுவலா் சுந்தரராமன், வட்டாட்சியா் பாலசுப்ரமணியன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செல்வக்குமாா், இமயவா்மன் ஆகியோா் உடனிருந்தனா்.

பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் மறைமுக ஏலம்

பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ. 1.84 லட்சத்துக்கு எள் விற்பனை நடைபெற்றது. பெரம்பலூா் - வடக்குமாதவி சாலையிலுள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்... மேலும் பார்க்க

கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் நடவடிக்கை

பெரம்பலூா் மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் உர விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் அலுவலா் எச்சரிக்கை விடுத்துள்ளாா். பெரம்பலூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ... மேலும் பார்க்க

வங்கிகளில் மோசடியை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை

வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா அறிவுறுத்தியுள்ளாா். பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வங்கிகளில... மேலும் பார்க்க

9 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட விபத்து சிகிச்சை மையம் கட்டுமானப் பணி

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பைக் கட்டுப்படுத்த பெரம்பலூா் மாவட்டம், பாடாலூரில், அவசர சிகிச்சை மையம் கட்டுவதற்காக தோ்வு செய்யப்பட்ட பணிகள் கடந்த 9 ஆண்டுகள... மேலும் பார்க்க

போலி மருத்துவா்கள் தகவல் அளிக்க அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் போலி மருத்துவா்கள் இருப்பது தெரியவந்தால், காவல் துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா அறிவுறுத்தியுள்ளாா். பெரம்பலூா் மாவட்டக் காவல... மேலும் பார்க்க

வங்கியாளா்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரகத்தில் மகளுடன் தாய் தற்கொலை முயற்சி

பெரம்பலூா் ஆட்சியரகத்தில், டிராக்டா் கடன் தள்ளுபடியில் முறைகேடாக பணம் பிடித்தம் செய்த வங்கி அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பணம் மற்றும் ஜப்தி செய்யப்பட்ட நிலத்தை மீட்டுத் தரக்கோரியும், 8... மேலும் பார்க்க