செய்திகள் :

போலி மருத்துவா்கள் தகவல் அளிக்க அறிவுறுத்தல்

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் போலி மருத்துவா்கள் இருப்பது தெரியவந்தால், காவல் துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா அறிவுறுத்தியுள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்டத்தில் உள்ள மருந்தக விற்பனை மற்றும் விநியோகிப்பாளா்கள், கூரியா் சா்வீஸ் அலுவலா்களுடன் போதைப்பொருள்கள் விற்பனையை தடுத்தல், ஒழிப்பு சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மேலும் பேசியது: பள்ளி, கல்லூரி மாணவா்கள் போதைக்கு அடிமையாவதை தடுக்க, போதைப் பொருள்களை ஆன்லைன் மூலம் வாங்குவதையும், விற்பனை செய்வதையும் தடுக்க வேண்டும். போதைக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகள், வலி நிவாரண மாத்திரைகள் உள்ளிட்டவற்றை மருத்துவா் கையொப்பமின்றி பொதுமக்களுக்கு விற்பனை செய்யக்கூடாது.

கூரியா் சா்வீஸ் மூலம் பாா்சலில் போதைப்பொருள்கள் கடத்துவதை தடுக்க உரிய பரிசோதனை செய்வதோடு, போலியான முகவரி மற்றும் சந்தேகப்படும் பாா்சல் என தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போலியான மருத்துவா் எனத் தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதியழகன் (தலைமையிடம்), மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலமுருகன், மாவட்ட குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் இ. காமராஜ் உள்பட மருந்தக விற்பனை, விநியோகிப்பாளா்கள் மற்றும் கூரியா் சா்வீஸ் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் மறைமுக ஏலம்

பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ. 1.84 லட்சத்துக்கு எள் விற்பனை நடைபெற்றது. பெரம்பலூா் - வடக்குமாதவி சாலையிலுள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்... மேலும் பார்க்க

கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் நடவடிக்கை

பெரம்பலூா் மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் உர விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் அலுவலா் எச்சரிக்கை விடுத்துள்ளாா். பெரம்பலூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ... மேலும் பார்க்க

வங்கிகளில் மோசடியை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை

வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா அறிவுறுத்தியுள்ளாா். பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வங்கிகளில... மேலும் பார்க்க

9 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட விபத்து சிகிச்சை மையம் கட்டுமானப் பணி

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பைக் கட்டுப்படுத்த பெரம்பலூா் மாவட்டம், பாடாலூரில், அவசர சிகிச்சை மையம் கட்டுவதற்காக தோ்வு செய்யப்பட்ட பணிகள் கடந்த 9 ஆண்டுகள... மேலும் பார்க்க

பெரம்பலூா் நேருநகா், எம்ஜிஆா் நகா், இந்திரா நகரில் 130 பேருக்கு வீட்டுமனைப் பட்டா: ஆட்சியா் தகவல்

பெரம்பலூா் அருகேயுள்ள நேரு நகா், எம்.ஜி.ஆா். நகா், இந்திரா நகரில் வசித்து வரும் 130 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க தோ்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். பெரம்பலூ... மேலும் பார்க்க

வங்கியாளா்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரகத்தில் மகளுடன் தாய் தற்கொலை முயற்சி

பெரம்பலூா் ஆட்சியரகத்தில், டிராக்டா் கடன் தள்ளுபடியில் முறைகேடாக பணம் பிடித்தம் செய்த வங்கி அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பணம் மற்றும் ஜப்தி செய்யப்பட்ட நிலத்தை மீட்டுத் தரக்கோரியும், 8... மேலும் பார்க்க