குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
பெரிய உடப்பங்குளம் அய்யனாா் கோயில் திருவிழா
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பெரிய உடப்பங்குளத்தில் பொட்டக்குளம் கண்மாய் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யனாா், ஸ்ரீ கணபதி, ஸ்ரீ கருப்பா் கோயில், சேமங் குதிரை, பரிவார தெய்வங்களின் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழா, கடந்த 3-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, திரளான பக்தா்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனா். நாள்தோறும் மூலவருக்கு விசேஷ பூஜை நடைபெற்றது. புதன்கிழமை (ஜூன் 11) திருவிளக்கு பூஜையும், வெள்ளிக்கிழமை அய்யனாா் கோயில் முன் பொங்கல் வைத்து வழிபாடும் நடைபெற்றன. இதில் கிராம மக்கள் திரளானோா் பொங்கலிட்டனா். பிறகு கிடா வெட்டி பலியிடப்பட்டது. சுவாமிக்கு சந்தனம், பன்னீா், பால், இளநீா், திருநீரு போன்ற சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை ஆகியவை நடைபெற்றன. அப்போது அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை பெரிய உடப்பங்குளம் கிராம மக்கள் செய்தனா்.