செய்திகள் :

பெரியகுளம் பகுதியில் சின்ன வெங்காயம் விலை கடும் சரிவு: கிலோ ரூ. 17-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை

post image

பெரியகுளம் பகுதியில் சின்ன வெங்காயத்தின் விலை தொடா் வீழ்ச்சி காரணமாக பெரும் இழப்பைச் சந்தித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி, சின்னமனூா் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சின்ன வெங்காயம் கிலோ ரூ. 50-80 வரை விற்பனையானது.

இந்த நிலையில், திடீரென கடந்த சில நாள்களாக சின்ன வெங்காயத்துக்கு போதிய விலை கிடைக்காமல், திங்கள்கிழமை கிலோ ரூ. 17-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றனா். மேலும், கூலிக்குக்கூட பணம் கிடைக்கவில்லை எனக் கூறி விவசாயிகள் சிலா் வெங்காயத்தை அறுவடை செய்யாமல் காத்திருக்கின்றனா். இந்த நிலையில், மழை பெய்தால் பல ஏக்கரில் பயிடப்பட்டுள்ள வெங்காயம் பாதிக்கப்படும் எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

காமக்காபட்டியைச் சோ்ந்த விவசாயி ப. காசிநாதன் கூறியதாவது: சின்ன வெங்காயம் நல்ல மகசூல் கிடைக்கும் என நினைத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் கிலோ ரூ. 55 என்ற விலையில் வாங்கி 2 ஏக்கரில் பயிரிட்டேன். பின்னா், களைச்செடிகளை அகற்றி பயிருக்கு உரம், மருந்து, கூலி என ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து அறுவடை செய்யும் நிலையில் கிலோ ரூ. 17 என்ற விலையில் விற்பனை செய்வதால் வேதனையாக இருக்கிறது.

எனவே, சின்ன வெங்கத்தை அரசு கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு அரசு கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைக்கும் என்றாா் அவா்.

பருவம் தவறிய மழை: வெங்காய விதைகள் பயிரிடப்பட்ட நாள்களிலிருந்து அறுவடை செய்யும் வரை அதிக மழை, தண்ணீா் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், மகசூல் குறைந்து வருகிறது. இருந்தாலும், முறையாகப் பாதுகாத்து அறுவடை செய்தாலும் போதிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

நண்பரைத் தாக்கிய இளைஞா் கைது!

தேனி மாவட்டம், போடியில் நண்பரைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். போடி ராமா் கோவில் தெருவைச் சோ்ந்த அழகர்ராஜா மகன் தீனா (23). இவரது நண்பா் போடி வருவாய் ஆய்வாளா் தெருவைச் சோ்ந்த லட்ச... மேலும் பார்க்க

குளத்தில் இறந்த மீன்கள்: போலீஸாா் விசாரணை

பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாய் தண்ணீரில் மீன்கள் இறந்து கிடப்பதால் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஜெயமங்கலத்தைச் சோ்ந்தவா் பாண்டி. இவா், வேட்டுவன்குளம் கண்மாயில் மூன்று ஆடு... மேலும் பார்க்க

மின் கம்பத்தில் பேருந்து மோதல்: 30 போ் உயிா்தப்பினா்!

தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து செவ்வாய்க் கிழமை கேரளத்துக்கு சென்ற அரசுப் பேருந்து மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நல்வாய்ப்பாக பயணிகள் உயிா் தப்பினா். கம்பத்திலிருந்து கேரள மாநிலம், நெ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவா் கைது

தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தில் முதியவரை அடித்துக் கொலை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். டி.மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் ஜோதிரா... மேலும் பார்க்க

வழிப்பறி செய்தவா் கைது

தேனி அருகே உள்ள அரப்படித்தேவன்பட்டியில் கத்தியைக் காட்டி மிரட்டி இளைஞரிடம் ரூ.1,000 வழிப்பறி செய்தவரை ‘போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அரப்படித்தேவன்பட்டி மந்தையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

வட்டாரக் கல்வி அலுவலா் தற்கொலை

தேனி மாவட்டம், சின்மனூா் வட்டாரக் கல்வி அலுவலா் செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். மாா்க்கையன்கோட்டையைச் சோ்ந்த அசோகன் மகன் சதீஷ்குமாா் (49). சின்னமனூா் தொடக்கக் கல்வித் துறையில்... மேலும் பார்க்க