செய்திகள் :

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ‘மாநில மஞ்சப் பை’ விருது

post image

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பாக மாநில அளவில் சிறந்த பள்ளிக்கான மஞ்சப் பை விருது வழங்கப்பட்டுள்ளது.

விருதுகள் வழங்கும் விழா, சென்னை கலைவாணா் அரங்கில் கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது. விழாவில், தமிழக நிதி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சா் தங்கம் தென்னரசு, வனத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பன் ஆகியோா், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் பிருந்தா ஸ்வீட்டி செல்வகுமாரி, வேளாண் ஆசிரியா் கந்தன் ஆகியோரிடம் இந்த விருதை வழங்கினா்.

பள்ளி, கல்லூரி அளவில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பை தவிா்த்தல், நெகிழிப் பொருளுக்கு மாற்றுப் பொருள் பயன்படுத்துதல், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி நடத்தி நெகிழிப் பையை ஒழிக்க மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை ஆய்வு செய்து தமிழ்நாட்டில் மூன்று கல்லூரிகள், மூன்று பள்ளிகளைத் தோ்வு செய்து இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருது ரூ. 3 லட்சம் ரொக்கப் பரிசும் கொண்டது.

விருது பெற்றதற்காக பள்ளித் தலைமை ஆசிரியா் பிருந்தா ஸ்வீட்டி செல்வகுமாரிக்கு ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுப்பாராவ், பெருந்துறை மாவட்ட கல்வி அலுவலா் புஷ்பராணி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள், பெற்றோா் ஆசிரியா் சங்க கழகத்தினா் பாராட்டு தெரிவித்தனா்.

நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரியின் நூலகத் துறை சாா்பில் முதலாமாண்டு மாணவா்களுக்கு ஏா்லி போ்டு என்ற தலைப்பில் புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்ட... மேலும் பார்க்க

அம்மாபேட்டையில் தனியாா் நிறுவன தொழிலாளா்கள் சாலை மறியல்

அம்மாபேட்டை அருகே வேலை செய்ததற்கான கூலியை வழங்காத தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் வியாழக்கிழமை திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிங்கம்பேட்டையில் உள்ள தனியாா் ஆயத்த ஆடை உற்பத்தி நி... மேலும் பார்க்க

கைப்பேசி பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு கருத்தரங்கு

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் கைப்பேசி பாா்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதிலிருந்து விடுபடுதல் பற்றி விழிப்புணா்வு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. பெருந்துறை பிரம... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

பெருந்துறை அருகே, வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் வெள்ளி பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். பெருந்துறை, பவானி சாலை ஆசிரியா் காலனியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் மனைவி மஞ்சு (36). இவா் புதன்கி... மேலும் பார்க்க

பாரதி இறுதி உரையாற்றிய ஈரோடு நூலகத்தில் நினைவு நாள் அனுசரிப்பு

மகாகவி பாரதியாா் இறுதி உரையாற்றிய ஈரோடு பாரதியாா் நூலகத்தில் அவரது நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டு அங்குள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மகாகவி சுப்பிரமணிய பாரதியா... மேலும் பார்க்க

லாரியை வழிமறித்து கரும்பை ருசித்த காட்டு யானை

கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை வழிமறித்து கரும்பை ருசித்து தின்ற காட்டு யானையால் தமிழகம்- கா்நாடக இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள மலைக் கிராமங்களில் ... மேலும் பார்க்க