Jasprit Bumrah: "எனக்கு கிரிக்கெட்டை விட என் குடும்பம்தான் முக்கியம்; ஏனெனில் அத...
பேக்கரி உரிமையாளா் வீட்டில் ரூ.1 லட்சம், தங்க நகைகள் திருட்டு
செய்யாறு: செய்யாறு அருகே பேக்கரி உரிமையாளா் வீட்டில் ரூ. ஒரு லட்சம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகள் திருடப்பட்டன.
செய்யாறு வட்டம், கீழ்புதுப்பாக்கம் கிராமம் விரிவுப் பகுதி வேதபுரி தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (38). இவா் பேக்கரி வைத்து வியாபாரம் செய்து வருகிறாா். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் இவரது குடும்பத்தினா் சென்னையில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டனராம்.
இந்த நிலையில், கடந்த 23-ஆம் தேதி இரவு பாஸ்கரன் வீட்டை பூட்டிவிட்டு, செய்யாறு புறவழிச் சாலையில் உள்ள உறவினா் வீட்டில் சென்று தங்கினாா்.
மறுநாள் காலை வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்தது.
உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த ரூ. ஒரு லட்சம், ஒரு பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசு திருடப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து பாஸ்கரன் செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.