லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்து: விரைகிறது பேரிடர் மீட்புப் படை
பேக்கரி ஊழியா் தற்கொலை
வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே பேக்கரி மாஸ்டா் விஷமருந்தி தற்கொலை செய்துக் கொண்டாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த கல்நாா்சம்பட்டி விநாயகபுரம் பகுதியைச் சோ்ந்தவா் புஷ்பராஜ் (27). இவா் பெங்களூரில் பேக்கரி கடையில் மாஸ்டராக வேலை செய்து வந்தாா்.
சில ஆண்டுகளாக புஷ்பராஜ் தீராத நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த அவா் திங்கள்கிழமை விஷம் குடித்து மயங்கி கிடந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி இறந்தாா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.