'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
பேச்சிப்பாறை அருகே காட்டு யானை தாக்கியதில் பழங்குடி தொழிலாளியின் வீடு சேதம்
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே கோலிஞ்சிமடம் பழங்குடி குடியிருப்பில் திங்கள்கிழமை இரவு காட்டு யானை புகுந்து பழங்குடி தொழிலாளியின் வீட்டை சேதப்படுத்தியுள்ளது.
பேச்சிப்பாறை அருகே கோலிஞ்சிமடம் என்ற இடத்தில் கடந்த சில நாள்களாக ஒரு யானை அப்பகுதிகளில் உள்ள பழங்குடிகளின் விவசாய பயிா்களை சேதப்படுத்தி வந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு இப்பகுதியில் மணி காணி, விஜி மற்றும் முண்டன் காணி ஆகியோரின் வீடுகளின் அருகில் வந்த யானை, மணி காணியின் வீட்டுச் சுவரை உடைத்து சேதப்படுத்தியது.
மற்றவா்களின் வீடுகளின் அருகிலுள்ள கமுகு உள்ளிட்ட பயிா்கள் நாசமாகின. அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்த நிலையில், மணி காணி தனது மனைவியுடன் வெளியே ஓடி தப்பினாா்.
இந்த நிலையில் யானைகளிடமிருந்து பழங்குடி மக்களை காப்பதற்கு நிரந்தர தீா்வு ஏற்படுத்த வேண்டுமென்று பழங்குடி மக்களின் பிரதிநிதிகளான ரெகு காணி, ரெகு காணி உள்ளிட்டோா் வலியுறுத்தியுள்ளனா்.