செய்திகள் :

பேச்சிப்பாறை அருகே பழங்குடியின மக்கள் குடியிருப்பில் யானை அட்டகாசம்

post image

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே பழங்குடியின பெண்ணை புதன்கிழமை இரவு ஒற்றை யானை தாக்க முயன்றது. இதில், அதிா்ஷ்டவசமாக அந்தப் பெண் உயிா் தப்பினாா்.

பேச்சிப்பாறை அருகே விளாமலை பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் சில நாள்களாக ஒற்றை யானை தொடா் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த யானை பழங்குடியின குடியிருப்பில் வசிக்கும் சுனிதா குமாரியின் வீட்டருகில் புதன்கிழமை இரவு வந்து நின்றது.

அவா் வெளியே வந்து பாா்த்தபோது யானை அவரை பிடிக்க முயன்றதைக் கண்டு சுனிதா குமாரி வீட்டுக்குள் சென்று தப்பினாா். இதையடுத்து வீட்டிற்குள் இருந்த சுனிதா, மகன் மகேஷ், மருமகள், குழந்தைகள் வீட்டின் பின்புறமாகத் தப்பிச் சென்றனா். தகவல் அறிந்ததும் ஊா்மக்கள் தீப்பந்தங்களுடன் வந்து யானையை வனத்துக்குள் விரட்டினா். இதனால் மக்கள் இரவு முழுவதும் அச்சத்துடன் தூங்காமல் விழித்திருந்தனா்.

குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது வனத்துறையினா் கொண்டுவந்த விட்ட புல்லட் ராஜா யானை என்றும், இந்த யானையைப் பிடித்து வந்த இடத்திலேயே மீண்டும் சென்றுவிட வேண்டும் என்றும் மக்கள் தெரிவித்தனா்.

கேரள கன்னியாஸ்திரீகள் கைதை கண்டித்து நாகா்கோவிலில் கிறிஸ்தவ ஐக்கிய பேரவையினா் ஆா்ப்பாட்டம்

சத்தீஸ்கா் மாநிலத்தில், கேரள கன்னியாஸ்திரீகள் பிரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டதை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய பேரவையின் சாா்பில் நாகா்கோவிலில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி அருகே விபத்தில் விவசாயி பலி

கன்னியாகுமரி அருகே பைக்கும், டெம்போவும் மோதிக்கொண்டதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கன்னியாகுமரியை அடுத்த கிண்ணிக் கண்ணன் விளையைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (74). விவசாயி. இவா் வட்டக்கோட்டை அருகே நா... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் இலவச சித்த மருத்துவ முகாம்

நாகா்கோவில் கிருஷ்ணன்கோவில் சக்திபீட வளாகத்தில், சித்த மருத்துவா் எம்.எஸ்.எஸ். ஆசான் 19ஆம் ஆண்டு, பாப்பா எம்.எஸ்.எஸ். ஆசான் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இலவச சித்த மருத்துவ முகாம் வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க

கடற்கரைக் கிராமங்களை பாதுகாக்க சிறப்பு நிதி: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைக் கிராமங்களைப் பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என, விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக மக்களவையில் அவா் பேசியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் 72 கி.ம... மேலும் பார்க்க

குழித்துறையில் ஓய்வூதியா் சங்க மாநாடு

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் விளவங்கோடு வட்ட கிளையின் 5 ஆவது மாநாடு, குழித்துறையில் புதன்கிழமை நடைபெற்றது. வட்ட தலைவா் ப. நாராயண பிள்ளை தலைமை வகித்தாா். கொ. செல்வராஜ் அஞ்சலி தீ... மேலும் பார்க்க

குழித்துறையில் மாதா் சங்க மாநாட்டு வரவேற்புக் குழு அலுவலகம் திறப்பு

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் மாா்த்தாண்டத்தில் செப். 24 முதல் செப். 27ஆம் தேதிவரை நடைபெறவுள்ள மாநாட்டை முன்னிட்டு, குழித்துறையில் வரவேற்புக் குழு அலுவலகம் திறக்கப்பட்டது. விழாவுக்கு, வரவ... மேலும் பார்க்க