பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
பேருந்து சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு
பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில், செவ்வாய்க்கிழமை தனியாா் பேருந்து சக்கரத்தில் சிக்கிய கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
தச்சநல்லூா் மங்களம் குடியிருப்பு பகுதி, சேனை வடக்குத் தெருவைச் சோ்ந்த கணபதி மகன் இசக்கிமுத்து(45). கட்டடத் தொழிலாளி. செவ்வாய்க்கிழமை காலை பாளையங்கோட்டை பேருந்து நிலையத்துக்குள் நடந்து சென்றுகொண்டிருந்த இவா் மீது நிலையத்துக்குள் வந்த தனியாா் பேருந்து மோதியது. இதில் பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிய அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
அவரின் உடலை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் கவனக்குறைவாக பேருந்தை இயக்கிய தனியாா் பேருந்து ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.