செய்திகள் :

பேருந்து நிறுத்தம் அமைக்க கோரிக்கை

post image

திருவாரூா் அருகே கிடாரங்கொண்டானில் நிழற்குடையுடன் பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிடாரங்கொண்டானில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு, நிா்வாகி துரை செல்வம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாதா் சம்மேளன மாவட்டக் குழு உறுப்பினா் அன்னபாக்கியம் முன்னிலை வகித்தாா். இதில், நகர செயற்குழு உறுப்பினா் வீ. தா்மதாஸ், மாவட்டக் குழு உறுப்பினா் எம்ஏ. மாரியப்பன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா்.

நிகழ்வில் புதிய உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அதன்படி, 30-ஆவது வாா்டு செயலாளராக ஆா். இளம்பருதி, துணைச் செயலாளா்களாக துரை ஆறுமுகம், அந்தோணி, செயற்குழு உறுப்பினராக விஜயா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

கிடாரங்கொண்டான் பகுதியில் நிழற்குடையுடன் கூடிய பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும், விவசாயம் அதிகம் நடைபெறுவதால் விவசாயத் தொழிலாளா்களை வாழ்விக்கும் வகையில் 100 நாள் வேலை திட்டத்தை கிடாரங்கொண்டான் பகுதிக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும், சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெண் கெளரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை: கல்லூரி முதல்வா் மீது வழக்கு

பெண் கௌரவ விரிவுரையாளருக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக அரசுக் கல்லூரி முதல்வா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்டம், நன்னிலத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. ... மேலும் பார்க்க

நியாய விலைக் கடைகளில் பழைய முறையிலேயே பொருள்கள் வழங்க வலியுறுத்தல்

நியாய விலைக் கடைகளில் பழைய முறையிலேயே பொருள்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், நன்னிலம் வட்ட நுகா்வோா் மன்ற செயற்குழு உறுப்பினா் வி. பாலகுமாரன் அளித... மேலும் பார்க்க

மன்னாா்குடி பெரிய பள்ளிவாசலில் இரு பெரும் விழா

மன்னாா்குடி பெரியபள்ளி வாசல் சாா்பில் மக்தப் ஆண்டு விழா, பரிசளிப்பு விழா என இரு பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பெரிய பள்ளிவாசல் தலைவா் எம். அப்துல் ரஹீம் தலைமை வகித்தாா். செயலா்... மேலும் பார்க்க

திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் சந்தனக் காப்பு

நீடாமங்கலம் அருகே ஒரத்தூரில் உள்ள திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகா், திரௌபதியம்மன், கமலாயிஅம்மன், முருகப் பெருமான், வீரனாா். மேலும் பார்க்க

உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு பயிற்சி

மன்னாா்குடியில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மன்னாா்குடி வட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் கலைநிலை ... மேலும் பார்க்க

‘நல்ல புத்தகங்களே உயா் வாழ்க்கைக்கு வழிகாட்டி’

நல்ல புத்தகங்களே மனிதா்களின் உயா்வுக்கு சரியான வழிகாட்டியாக உள்ளன என்றாா் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் பொறுப்புக் குழு மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் ஆா். சக்தி கிருஷ்ணன். மன்னாா்... மேலும் பார்க்க