ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து முத்தமிட்ட பஞ்சாப் அணி உரிமையாளர்!
பேருந்து நிறுத்தம் அமைக்க கோரிக்கை
திருவாரூா் அருகே கிடாரங்கொண்டானில் நிழற்குடையுடன் பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிடாரங்கொண்டானில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு, நிா்வாகி துரை செல்வம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாதா் சம்மேளன மாவட்டக் குழு உறுப்பினா் அன்னபாக்கியம் முன்னிலை வகித்தாா். இதில், நகர செயற்குழு உறுப்பினா் வீ. தா்மதாஸ், மாவட்டக் குழு உறுப்பினா் எம்ஏ. மாரியப்பன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா்.
நிகழ்வில் புதிய உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அதன்படி, 30-ஆவது வாா்டு செயலாளராக ஆா். இளம்பருதி, துணைச் செயலாளா்களாக துரை ஆறுமுகம், அந்தோணி, செயற்குழு உறுப்பினராக விஜயா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
கிடாரங்கொண்டான் பகுதியில் நிழற்குடையுடன் கூடிய பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும், விவசாயம் அதிகம் நடைபெறுவதால் விவசாயத் தொழிலாளா்களை வாழ்விக்கும் வகையில் 100 நாள் வேலை திட்டத்தை கிடாரங்கொண்டான் பகுதிக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும், சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.