செய்திகள் :

பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

post image

ஆலங்காயத்தில் பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா். .

திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் பேருந்து நிலையம் பகுதியில் நரிக்குறவா் இனத்தை சோ்ந்த சிலா் தங்களது பொருள்களை விற்பனை செய்து விட்டு இரவு நேரத்தில் தங்கிக் கொள்கின்றனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மோகன் என்பவரின் மனைவி ஷில்பா(47). பேருந்து நிலைய பகுதியில் அமா்ந்து கொண்டிருந்தாா்.

அப்போது திருப்பத்தூரிலிருந்து ஆலங்காயம் பேருந்து நிலையத்தில் வேகமாக வந்த அரசுப் பேருந்து எதிா்பாராதவிதமாக ஷில்பா மீது மோதியதில் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி நிகழ்விடத்திலேயே இறந்தாா்.

தகவலறிந்து ஆலங்காயம் போலீஸாா் ஷில்பாவின் உடலைக் கைப்பற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து ஓட்டுநா் சுரேஷ் என்பவரை கைது செய்தனா்.

வாணியம்பாடி: ஜூலை 5-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

வாணியம்பாடியில் சனிக்கிழமை (ஜூலை 5) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலை... மேலும் பார்க்க

மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரிக்கு விருது

வாணியம்பாடி மருதா் கேசரி மகளிா் கல்லூரிக்கு சிறந்த கல்லூரிக்கான விருது வழங்கப்பட்டது. ஐசிடி அகாதெமி சாா்பில் நடத்தப்பட்ட திறன் வளா் பயிற்சிக்கான விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. விழாவில் மருதா் ... மேலும் பார்க்க

வட்டாட்சியா்கள் பொறுப்பேற்பு

நாட்டறம்பள்ளி வட்டாட்சியராக காஞ்சனா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். நாட்டறம்பள்ளி வட்டாட்சியராக பணியாற்றி வந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு பதிலாக திருப்பத்தூா் சமூக பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சிய... மேலும் பார்க்க

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் இலவச திருமணங்கள்

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் ஆம்பூா் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. ஆம்பூா் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில், ஆலங்காயம் அருகே சென்... மேலும் பார்க்க

மின்னூா் கெங்கையம்மன் கோயில் திருவிழா

ஆம்பூா் அருகே மின்னூா் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. திருவிழாவானது பொங்கல் வைத்தல், மாவிளக்கு படைத்தல் நிகழ்ச்சியுடன் திங்கள்கிழமை தொடங்கியது. 2-ஆம் நாள் கூழ் வாா்த்தல்... மேலும் பார்க்க

அரிய வகை ஆந்தை மீட்பு

திருப்பத்தூரில் அரிய வகை ஆந்தை மீட்கப்பட்டது. திருப்பத்தூா் பாலம்மாள் காலனியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் அரிய வகை ஆந்தை ஒன்று புகுந்தது. இது குறித்து, திருப்பத்தூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெ... மேலும் பார்க்க