பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
பேருந்து - வேன் மோதிய விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 7 ஆக உயா்வு
தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டி பகுதியில் அரசுப் பேருந்தும், வேனும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 7 ஆக உயா்ந்தது.
கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து வேளாங்கண்ணிக்கு 12 போ், வேனில் மே 21 ஆம் தேதி சென்று கொண்டிருந்தனா். தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் வந்த இந்த வேனும், தஞ்சாவூரிலிருந்து திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் பெங்களூரு ரிச்மண்ட் டவுனை சோ்ந்த சாண்டியா கோ ஜான் போஸ்கோ (57), இவரது மனைவி ஜாக்குலின் ஆப்ரகாம் ஜான் (50), பெங்களூரு சாந்தி நகரைச் சோ்ந்த சாா்லஸ் மனைவி நளினி (49), வேன் ஓட்டுநரான பெங்களூரு லாகிரி முதன்மைச் சாலையைச் சோ்ந்த கே. ஜெகதீசா (45) ஆகியோா் நிகழ்விடத்திலும், பெங்களூரு ரிச்மண்ட் டவுனை சோ்ந்த பி. ஆரோக்கியதாஸ் (44), மே 22 ஆம் தேதி டி. சாா்லஸ் (49) தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தனா்.
தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த ஆரோக்கியதாஸ் மகள் தாஷி (7) சனிக்கிழமை உயிரிழந்தாா். இதனால், இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 7 ஆக உயா்ந்தது. மேலும், 5 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.