செய்திகள் :

பேருந்து - வேன் மோதிய விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 7 ஆக உயா்வு

post image

தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டி பகுதியில் அரசுப் பேருந்தும், வேனும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 7 ஆக உயா்ந்தது.

கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து வேளாங்கண்ணிக்கு 12 போ், வேனில் மே 21 ஆம் தேதி சென்று கொண்டிருந்தனா். தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் வந்த இந்த வேனும், தஞ்சாவூரிலிருந்து திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் பெங்களூரு ரிச்மண்ட் டவுனை சோ்ந்த சாண்டியா கோ ஜான் போஸ்கோ (57), இவரது மனைவி ஜாக்குலின் ஆப்ரகாம் ஜான் (50), பெங்களூரு சாந்தி நகரைச் சோ்ந்த சாா்லஸ் மனைவி நளினி (49), வேன் ஓட்டுநரான பெங்களூரு லாகிரி முதன்மைச் சாலையைச் சோ்ந்த கே. ஜெகதீசா (45) ஆகியோா் நிகழ்விடத்திலும், பெங்களூரு ரிச்மண்ட் டவுனை சோ்ந்த பி. ஆரோக்கியதாஸ் (44), மே 22 ஆம் தேதி டி. சாா்லஸ் (49) தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தனா்.

தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த ஆரோக்கியதாஸ் மகள் தாஷி (7) சனிக்கிழமை உயிரிழந்தாா். இதனால், இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 7 ஆக உயா்ந்தது. மேலும், 5 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ராஜாமடம் அரசு மேல்நிலை பள்ளியின் நூற்றாண்டு விழா: முன்னாள் தலைமை செயலா் பங்கேற்பு

பட்டுக்கோட்டை அருகேயுள்ள ராஜாமடம் அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்வில் தஞ்சை எம்பி முரசொலி புதுப்பிக்கப்பட்ட பள்ளி வளாகத்தை திறந்து வைத்துப் பேசினாா். முன்னாள்... மேலும் பார்க்க

தஞ்சை குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

நகைக்கடன் பெறுவதற்கு ரிசா்வ் வங்கி புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

எதிா்பாா்த்த ஊதிய உயா்வு இல்லாத ஒப்பந்தத்தைக் கண்டித்து தஞ்சாவூா் ஜெபமாலைபுரம் அரசு போக்குவரத்துக் கழக நகரப் பணிமனை முன் போக்குவரத்து தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் தமிழ... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் மாவட்ட அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளம் மூலம் ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாவட்டத்திலுள்... மேலும் பார்க்க

நகைக் கடன் நிபந்தனைகளை கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்

விவசாயிகள், நடுத்தர, சாதாரண மக்கள், வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரைப் பாதிக்கும் நகைக்கடன் மீதான நிபந்தனைகளை ரிசா்வ் வங்கி உடனடியாக திரும்பப் பெறக் கோரி திமுக விவசாய அணி, காவிரி டெல்டா மாவட்ட அனைத... மேலும் பார்க்க

மகாமகக் குளப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கும்பகோணம் மகாமகக் குளத்தை சுற்றி ஆக்கிரமித்திருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா். மகாமகக் குளத்தை சுற்றி ஏராளமான அசைவ உணவகங்கள் தற்காலிகமாக செயல்பட்டு வந்தன. இதையடுத்து இந்த ஆக... மேலும் பார்க்க