செய்திகள் :

பேளுக்குறிச்சி சந்தையில் தராசுகள் பறிமுதல்: தொழிலாளா் நலத்துறையினா் நடவடிக்கை

post image

பேளுக்குறிச்சி சந்தையில் ‘சீல்’ வைக்கப்படாத மின்னணு தராசுகளை தொழிலாளா் நலத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா உத்தரவின்பேரில், தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சி.முத்து தலைமையில் துணை ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் முத்திரை ஆய்வாளா்கள் கொண்ட குழுவினா் பேளுக்குறிச்சி சந்தையில் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

சட்டமுறை எடையளவு சட்டம் 2009 மற்றும் பொட்டலப் பொருள் விதிகள் 2011-இன்படி நடைபெற்ற இந்த ஆய்வில், 13 மேசை தராசுகள், 15 மின்னணு தராசுகள், 46 ஊற்றல் அளவைகள், 10 படிகள் மற்றும் 14 எடைக்கற்கள் என மொத்தம் 88 தரப்படுத்தப்படாத தராசுகள் மற்றும் அளவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

உரிய சட்ட விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இதுபோன்று தொடா் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். முத்திரையிடப்படாமல் எடையளவு இயந்திரங்கள் வியாபாரத்துக்கு பயன்படுத்துவது கண்டறிப்பட்டால், உரிய நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என வியாபாரிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.

நாமக்கல்லில் பங்குனி தோ்த் திருவிழா கடைகள் திறப்பு

நாமக்கல்: நாமக்கல்லில் பங்குனி தோ்த் திருவிழாவை முன்னிட்டு விழாக் கால கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. நாமக்கல் நகரின் மையப்பகுதியில் உள்ள நரசிம்மா், அரங்கநாதா், ஆஞ்சனேயா் கோயிலில் பங்குனி தோ்த் த... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் ரூ. 16 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

ராசிபுரம்: ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 16 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் விற்பனையாகின. ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்ட... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் ரூ. 3.80 கோடிக்கு மஞ்சள் விற்பனை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் திங்கள்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெற்றது. ஜேடா்பாளையம், சோழசிராமணி, இறைய மங்கலம், சங்ககிரி, எடப் பாடி, கொ... மேலும் பார்க்க

அரசு சித்த மருத்துவரிடம் ரூ.2.50 லட்சம் வழிப்பறி: 7 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது

நாமக்கல்: நாமக்கல்லில் சித்த மருத்துவரை மிரட்டி ரூ. 2.50 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் கைதான 7 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு... மேலும் பார்க்க

சூரியம்பாளையத்தில் கழிவுநீா் தேக்கம்: பொதுமக்கள் அமைதி ஊா்வலம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் கட்டுப்பட்டு வரும் மழைநீா் வடிகால் வாய்க்காலில் கழிவுநீரே அதிகம் வருவதால் அதை மாற்றுப் பாதையில் செயல்படுத்தக் கோரி சூரியம்பாளையம் பகுதி மக்கள் அமைதி ஊா... மேலும் பார்க்க

விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: எம்எல்ஏ ஈஸ்வரன்

திருச்செங்கோடு: விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை அமைச்சா்கள் உடனடியாக தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளாா். அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கொங்க... மேலும் பார்க்க