செய்திகள் :

பேஸ்பால் யுக்தியை தவறாக புரிந்துகொண்டு வீரர்களை அவமதிக்காதீர்கள்: பிரண்டன் மெக்கல்லம்

post image

பேஸ்பால் யுக்தியை தவறாக புரிந்துகொண்டு பேசுவது வீரர்களை அவமதிப்பதாக உணர்வதாக இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் கடந்த 2022 ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார். டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட அவர், கேப்டன் பென் ஸ்டோக்ஸுடன் இணைந்து வெற்றிகரமாக செயல்பட்டார்.

இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக மெக்கல்லம் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, அந்த அணியின் ஆட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது. வீரர்கள் அச்சமின்றி அதிரடியாக விளையாடத் தொடங்கினர். இங்கிலாந்தின் இந்த அணுகுமுறை பேஸ்பால் யுக்தி எனக் கூறப்பட்டது. குறிப்பாக, பேட்டிங்கில் அதிரடியாக விளையாடுவதே இந்த யுக்தியின் முக்கிய சிறப்பம்சம்.

இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி வெற்றிகளைப் பெற்றாலும், அந்த அணிக்கு தோல்விகள் ஏற்படாமலும் இல்லை. பேஸ்பால் யுக்தியால் இங்கிலாந்து அணி வெற்றி பெற வேண்டிய போட்டிகளில்கூட தோல்வியடைகிறது என கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

வீரர்களை அவமதிக்காதீர்கள்

இங்கிலாந்து அணியின் பேஸ்பால் யுக்தி கடுமையாக விமர்சிக்கப்படும் நிலையில், பேஸ்பால் யுக்தி வீரர்களை அதிரடியாக விளையாடக் கூறுவது கிடையாது எனவும், வீரர்கள் சுதந்திரமாக விளையாட உதவதே பேஸ்பால் யுக்தியின் நோக்கம் எனவும் இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாட்காஸ்ட் ஒன்றில் அவர் பேசியதாவது: அதிரடியாக மட்டுமே விளையாட வேண்டும் என்ற மனநிலையில் நாங்கள் ஒருபோதும் செயல்படுவதில்லை. நாங்கள் விளையாடும் விதம் குறித்து தவறான புரிதல் இருப்பதாக நினைக்கிறேன். நாங்கள் அதிரடியாக விளையாடுவோம், விக்கெட்டுகளைக் கைப்பற்றுவோம், ரிலாக்ஸ் செய்ய சென்றுவிடுவோம் என்ற தவறான புரிதல் இருக்கிறது.

இந்த தவறான புரிதல் வீரர்களை அவமதிக்கும் விதமாக இருப்பதாக உணர்கிறேன். அணியில் உள்ள அனைத்து வீரர்களும் அணியின் வெற்றிக்காக கடினமாக உழைக்கிறார்கள். வீரர்களின் திறமை வெளிப்பட வேண்டுமென்றால், அவர்கள் சுதந்திரமாக விளையாட வேண்டும். அழுத்தத்துடன் விளையாடும்போது, வீரர்களால் அவர்களது முழுத் திறனை வெளிக்கொணர முடியாது என்றார்.

இதையும் படிக்க: இன்னும் 2 ஆண்டுகள் விளையாட கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட் திட்டம்!

இந்தியா - அமீரகம் இன்று மோதல்

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை புதன்கிழமை (செப். 10) சந்திக்கிறது.இந்திய அணியைப் பொருத்தவரை, 14-ஆம் தேதி பாகிஸ்தானை சந்தி... மேலும் பார்க்க

முதல் டி20 போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போ... மேலும் பார்க்க

ஆசியக் கோப்பையில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாததன் காரணம் இதுதானா? அமித் மிஸ்ரா கூறுவதென்ன?

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா பேசியுள்ளார்.ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (செப்டம்பர் 9) முதல் ... மேலும் பார்க்க

ஆசிய கோப்பையில் ஆக்ரோஷமாக விளையாடுவோம்: சூர்யகுமார் யாதவ்

ஆசிய கோப்பையில் ஆக்ரோஷமாக விளையாடுவோம் என இந்திய டி 20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை போட்டிகளில் இன்று தொடங்குகிறன. இந்தியா தனது முதல் போட்டியில் யுஎஇ அணியுடன் நாளை (... மேலும் பார்க்க

இன்னும் 2 ஆண்டுகள் விளையாட கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட் திட்டம்!

ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஆஸி. பேஸ் டிரையோக்களின் கடைசி தொடராக ஆஷஸ் டெஸ்ட் இருக்காது எனக் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஜோஷ்... மேலும் பார்க்க

லபுஷேன் ஹாட்ரிக்: கோப்பையை வென்றது ரெட்லேண்ட்!

மார்னஸ் லபுஷேனின் அசத்தலான பந்துவீச்சினால் அவரது ரெட்லேண்ட் அணி இறுதிப் போட்டியில் வென்றது. கேஎஃப்சி டி20 மேக்ஸ் தொடரில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லேன்ட் கிரிக்... மேலும் பார்க்க