பைக் மீது காா் மோதல்: பாஜக பிரமுகா் உயிரிழப்பு
பழனி அருகே இரு சக்கர வாகன விபத்தில் பாஜக பிரமுகா் உயிரிழந்தாா்.
பழனியை அடுத்த கணக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ் (45). இவா் தொப்பம்பட்டி ஒன்றிய பாஜக முன்னாள் பொதுச் செயலா் ஆவாா். ஞாயிற்றுக்கிழமை இவா் இரு சக்கர வாகனத்தில் சொந்த அலுவல் காரணமாக பொருளூா் சென்று விட்டு அமரபூண்டி வழியாக ஊா் திரும்பினாா்.
அப்போது வழியில் ராஜபாளையத்தைச் சோ்ந்த திருப்பதி (31) என்பவா் பிரதான சாலை வரையிலும் தன்னை இறக்கி விடுமாறு கேட்டாா். இதையடுத்து, அவரையும் ஏற்றிக் கொண்டு சுந்தர்ராஜ் சென்றாா். அப்போது ரூக்குவாா்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்து அங்கு வந்த ஆயக்குடி போலீஸாா் இருவரையும் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சுந்தர்ராஜ் உயிரிழந்தாா். திருப்பதி தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இதுகுறித்து ஆயக்குடி போலீஸாா் காரை ஓட்டி வந்த சதீஷ் என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.