பைக் மீது வேன் மோதியதில் தொழிலாளிகள் இருவா் உயிரிழப்பு
வந்தவாசி அருகே பைக் மீது வேன் மோதியதில் கட்டடத் தொழிலாளிகள் இருவா் உயிரிழந்தனா்.
வந்தவாசியை அடுத்த இரும்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா்கள் மணிகண்டன் (29), முருகன்(37). கட்டடத் தொழிலாளா்களான இருவரும் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் வேலையை முடித்துவிட்டு புதன்கிழமை மாலை பைக்கில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா்.
வந்தவாசி-விளாங்காடு சாலை, இரும்பேடு கிராமம் அருகே சென்றபோது எதிரே வந்த தனியாா் நிறுவன வேன் இவா்களது பைக் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக உத்திரமேரூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு இருவரும் உயிரிழந்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.