பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
தேனி அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகன விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
கோட்டூா் ஆா்.சி. தெருவைச் சோ்ந்தவா் டேவிட் (35). கட்டடத் தொழிலாளியான இவா், தா்மாபுரியிலிருந்து கோட்டூருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, கரட்டுப் பாதை பகுதியில் மழை, சுழல் காற்றில் சிக்கி இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த டேவிட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.