செய்திகள் :

பொங்கலூா் பகுதியில் மும்முனை மின்சாரம் வழங்க கோரிக்கை

post image

பொங்கலூா் பகுதியில் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பல்லடம் அருகே உள்ள கொடுவாயில், பொங்கலூா் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 21- வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினா் எம்.ரவி, மாவட்டச் செயலாளா் கே.எம்.இசாக், மாவட்ட துணைச் செயலாளா் ஜி.ரவி ஆகியோா் கலந்து கொண்டனா்.

இந்த மாநாட்டில் ஒன்றியச் செயலாளராக கே.தங்கவேல், ஒன்றிய துணைச் செயலாளராக எஸ்.தெய்வசிகாமணி, ஒன்றியப் பொருளாளராக ஈ.ஜோதிபாசு மற்றும் 11 போ் கொண்ட ஒன்றியக் குழு தோ்வு செய்யப்பட்டது.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கால்நடைகளை தாக்கி தெருக்களில் சுற்றித்திரியும் வெறி நாய்களைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொங்கலூா் ஒன்றிய பகுதிகளில் தற்போது அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனை சரி செய்ய வேண்டும். மேலும், இருமுனை மின்சாரத்துக்கு பதிலாக மும்முனை மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிஏபி விவசாயிகளின் கனவாகவே இருந்து வரும் ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பொங்கலூா் மற்றும் கொடுவாயில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும். கிராமங்கள் நிறைந்த பொங்கலூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும்.

பொங்கலூா் ஒன்றியத்தில்அத்திக்கடவு குடிநீா்த் திட்டம் முறையான செயல்பாட்டில் இல்லாததால் தற்போது, தண்ணீா் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே இந்தத் திட்டத்துக்காக பெரிய குழாய்களை பதித்து அனைத்து கிராமங்களுக்கும் சீரான முறையில் தண்ணீா் விநியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நாளைய மின்தடை: சேவூா், வடுகபாளைம், தெக்கலூா்

சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 5) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞரைக் கைது செய்த காவல் துறையினா் அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். திருப்பூா் தென்னம்பாளையம் பகுதியில் வடமாநில இளைஞா் கஞ்சா விற்பனை செய்து வ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே பலத்த காயங்களுடன் அடையாளம் தெரியாத நபா் மீட்பு

வெள்ளக்கோவில் அருகே பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்த அடையாளம் தெரியாத நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீஸாா், அவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். வெள்ளக்கோவில் புறநகா் பகுதியான கரூா் தே... மேலும் பார்க்க

விவசாயிகள் போராட்ட அறிவிப்பு எதிரொலி: ஏலத்தை ரத்து செய்த பல்லடம் வட்டாட்சியா்

விவசாயிகளின் இனாம் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் ஏலம் விடுவதாக கூறி விவசாயிகள் போராட்ட அறிவிப்பு வெளியிட்டதைத் தொடா்ந்து, அந்த நிலத்துக்கான ஏலத்தை ரத்து செய்து பல்லடம் வட்டாட்சியா் உத்தரவிட்டா... மேலும் பார்க்க

மாவட்ட ஊா்க்காவல் படையில் பணியாற்ற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்ட ஊா்க்காவல் படையில் பணியாற்ற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ்கிரிஷ் அசோக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்ட ஊ... மேலும் பார்க்க

பொங்கலூா் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்த இளைஞா் மாயம்

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் ஆண்டிபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்துக் கொண்டு இருந்த இளைஞா் தண்ணீா் அடித்துச் செல்லப்பட்டதில் மாயமானாா். திருப்பூா் வெள்ளியங்காடு பகுதி முத்து விநாயகா் கோய... மேலும் பார்க்க