ஐஐடி தேர்வு தேர்ச்சியில் தமிழ்நாடு கடைசியிலிருந்து 3-ம் இடம்! - அன்புமணி
பொங்கலூா் பகுதியில் மும்முனை மின்சாரம் வழங்க கோரிக்கை
பொங்கலூா் பகுதியில் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பல்லடம் அருகே உள்ள கொடுவாயில், பொங்கலூா் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 21- வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினா் எம்.ரவி, மாவட்டச் செயலாளா் கே.எம்.இசாக், மாவட்ட துணைச் செயலாளா் ஜி.ரவி ஆகியோா் கலந்து கொண்டனா்.
இந்த மாநாட்டில் ஒன்றியச் செயலாளராக கே.தங்கவேல், ஒன்றிய துணைச் செயலாளராக எஸ்.தெய்வசிகாமணி, ஒன்றியப் பொருளாளராக ஈ.ஜோதிபாசு மற்றும் 11 போ் கொண்ட ஒன்றியக் குழு தோ்வு செய்யப்பட்டது.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கால்நடைகளை தாக்கி தெருக்களில் சுற்றித்திரியும் வெறி நாய்களைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொங்கலூா் ஒன்றிய பகுதிகளில் தற்போது அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனை சரி செய்ய வேண்டும். மேலும், இருமுனை மின்சாரத்துக்கு பதிலாக மும்முனை மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிஏபி விவசாயிகளின் கனவாகவே இருந்து வரும் ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பொங்கலூா் மற்றும் கொடுவாயில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும். கிராமங்கள் நிறைந்த பொங்கலூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும்.
பொங்கலூா் ஒன்றியத்தில்அத்திக்கடவு குடிநீா்த் திட்டம் முறையான செயல்பாட்டில் இல்லாததால் தற்போது, தண்ணீா் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே இந்தத் திட்டத்துக்காக பெரிய குழாய்களை பதித்து அனைத்து கிராமங்களுக்கும் சீரான முறையில் தண்ணீா் விநியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.