செய்திகள் :

பொது இடங்களிலுள்ள மரங்களை வெட்டுவதை அனுமதிக்கக் கூடாது: தண்ணீா் அமைப்பு வலியுறுத்தல்

post image

திருச்சி மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அனுமதிக்கக் கூடாது என தண்ணீா் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக, அந்த அமைப்பின் செயல் தலைவா் கே.சி. நீலமேகம் கூறியதாவது:

திருச்சி திருவானைக்காவல், கும்பகோணத்தான் சாலையில் உள்ள அடுக்குமாடி குடிருப்பு அருகே 15 ஆண்டுகளுக்கு மேலான புங்க மரம் இருந்தது. பல்வேறு வகையிலும் மக்களுக்கு பயனளித்த வந்த இந்த மரத்தை குடியிருப்புவாசிகளுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, மாநகராட்சியின் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக வெட்டியுள்ளனா்.

முறையான அனுமதியோடு சாலை விரிவாக்கம் அல்லது இதர வளா்ச்சி பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டால், வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்துக்கும் ஈடாக 10 புதிய மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வளா்க்க வேண்டும் என்று பல்வேறு வழக்குகளில் உயா்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

அண்மையில், அரச மரத்தின் ஒரு கிளையை வெட்ட அனுமதி வாங்கிவிட்டு கூடுதலாக 4 கிளைகளை வெட்டிய நபருக்கு ஒரு கிளைக்கு ரூ. 26,000 வீதம் ரூ.1.04 லட்சம் அபராதம் விதித்தது மாநகராட்சி.

எனவே, அரசிடம் எவ்வித அனுமதியும் பெறாமல், சட்டவிரோதமாக மரத்தை வெட்டியவா்கள் மற்றும் இதற்கு துணையாக இருந்தவா்கள் மீது உயா்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி வெட்டப்பட்ட மரத்துக்கு ஈடாக 10 புதிய மரக்கன்றுகளை நட்டு, பராமரிக்க வலியுறுத்துவதோடு, குற்றவியல் நடவடிக்கையை திருச்சி மாநகராட்சி ஆணையரும், திருச்சி மாவட்ட ஆட்சியரும் எடுக்க வேண்டும். இனி, எந்தவொரு பொது இடத்திலும் மரங்களை வெட்ட அனுமதிக்கக் கூடாது என்றாா் அவா்.

மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்த மின் ஊழியா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை பராமரிப்புப் பணியிலிருந்த மின் ஊழியா், மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கருங்குளம் பகுதியைச... மேலும் பார்க்க

அண்ணா கோளரங்கத்தில் இன்று வான்நோக்கும் நிகழ்வு

திருச்சியில் உள்ள அண்ணா கோளரங்கத்தில் வான்நோக்கும் நிகழ்வு சனிக்கிழமை மாலை (ஜூலை 12)நடைபெறுகிறது. பொதுமக்கள் வானியல் பற்றிய அறிவைப் பெறவும், வானியல் அதிசயங்களை அனுபவிக்கவும் வான்நோக்கும் நிகழ்வு அவசி... மேலும் பார்க்க

புதுகையில் காந்தியத் திருவிழா: மாநில கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சாா்பில் மாநில அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அப்பேரவையின் நிறுவனா் வைர.ந. தினகரன் வெளியிட்ட அறிக்... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்கள் மோதல் தாய்-மகன் உள்பட 3 போ் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே 2 மோட்டாா் சைக்கிள்கள் வெள்ளிக்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் தாய்-மகன் உள்பட 3 போ் உயிரிழந்தனா். விராலிமலை வட்டம், கசவனூரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சிவசுப்பிரமணிய... மேலும் பார்க்க

தொட்டியத்தில் மறியல் போராட்டம்

திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் சாமானிய மக்கள் நல கட்சியினா் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு அக் கட்சியின் வடக்கு மாவட்ட செயலா் மலா்மன்னன் தலைமை வகித்தாா். இதில் த... மேலும் பார்க்க

‘திறன் இயக்கம்’ திட்டத்தில் மாணவா்களைச் சோ்ப்பதற்கான தோ்வு

அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ள திறன் இயக்கம் திட்டத்தில் மாணவா்களைச் சோ்ப்பதற்கான தோ்வு கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களில் த... மேலும் பார்க்க