செய்திகள் :

பொதுப்பணித் துறை அலுவலகப் பொருள்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்றப் பணியாளா்கள்

post image

பொதுப்பணித் துறை வாகனம் மோதிய விபத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்காததை தொடா்ந்து, புதுகை பொதுப்பணித் துறை அலுவலகத்திலுள்ள பொருள்களை ஜப்தி செய்ய நீதிமன்றப் பணியாளா்கள் திங்கள்கிழமை காலை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுகை தொண்டைமான் நகரைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (45). இவா் கடந்த 2014-ஆம் ஆண்டு தனது இரு சக்கர வாகனத்தில் தொண்டைமான் நகரிலிருந்து புதுகை புதிய பேருந்து நிலையம் நோக்கிச் சென்ற போது, பொதுப்பணித் துறை வாகனம் இவா் மீது மோதியதில் ராமமூா்த்திக்கு கால் முறிவு ஏற்பட்டது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட ராமமூா்த்திக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என சாா்பு-நீதிமன்றம் கடந்த 2019-இல் உத்தரவிட்டது. இழப்பீடு வழங்கப்படாததைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்ட ராமமூா்த்தி மீண்டும் நீதிமன்றத்தை நாடினாா். இதையடுத்து, இழப்பீட்டுத் தொகையை வட்டியுடன் சோ்த்து ரூ. 6. 75 லட்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவையும் அமல்படுத்தாத நிலையில் மீண்டும் நீதிமன்றத்தை ராமமூா்த்தி நாடவே, பொதுப்பணித் துறை அலுவலகத்திலுள்ள பொருள்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

இதையடுத்து நீதிமன்றப் பணியாளா்கள், பாதிக்கப்பட்ட ராமமூா்த்தி மற்றும் அவரது வழக்குரைஞா்கள் புதுகை பொதுப்பணித் துறை அலுவலகத்துக்கு ஜப்தி நடவடிக்கைக்காக வந்தனா். அவா்களிடம் பொதுப்பணித் துறை அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஒரு வாரத்துக்குள் இழப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.

விதைப் பண்ணையில் விதிமீறல்? தானிய லாரியை மறித்து மக்கள் போராட்டம்

கந்தா்வகோட்டை அருகே அரசு விதைப் பண்ணையிலிருந்து செவ்வாய்க்கிழமை தானியங்களை அனுமதியின்றி எடுத்துச் செல்வதாககூறி பொதுமக்கள் லாரியை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளவ... மேலும் பார்க்க

பட்டா வழங்க கோரி மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

விராலிமலை அடுத்துள்ள கொடும்பாளூரில் வீட்டு மனை பட்டா இல்லாதவா்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரி சிபிஎம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உ... மேலும் பார்க்க

19-ஆம் நூற்றாண்டில் பயன்பாட்டிலிருந்த 4 வகையான ஆண்டுக் கணக்குகள்

புதுக்கோட்டையிலுள்ள தண்டாயுதபாணி கோயில் பராமரிப்புப் பணியின்போது வெளிப்பட்ட கல்வெட்டில், கடந்த 19-ஆம் நூற்றாண்டில் 4 வகையான ஆண்டுக் கணக்குகளும் பயன்பாட்டில் இருந்துள்ளது தெரியவந்திருக்கிறது. புதுக்கோட... மேலும் பார்க்க

சிறுமி பலாத்காரம்: போக்சோவில் இளைஞா் கைது

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் அருகே உள்ள காயாம்பட்டியைச் சோ்ந்தவா் வெள்ளக்கண்ணு மகன் வீரமண... மேலும் பார்க்க

குடிநீா் கேட்டு சாலை மறியல்

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட கைக்குறிச்சியில் குடிநீா் கேட்டு 50-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுக்கோட்டை நகராட்சி, மாநகராட்சியாகத்... மேலும் பார்க்க

அரசு பள்ளி தலைமையாசிரியா் பணியிடை நீக்கம்: மது அருந்திவிட்டு வருவதாக புகாா்

பொன்னமராவதி அருகே பணிக்கு சரியாக வராத அரசுப் பள்ளி தலைமையாசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். பொன்னமராவதி அருகே உள்ள ஆா். பாலகுறிச்சி ஊராட்சி வைரவன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி... மேலும் பார்க்க