பொன்வைத்தநாதா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா
திருக்குவளை அருகே சித்தாய்மூரிலுள்ள அகிலாண்டேஸ்வரி அம்பாள் உடனுறை பொன்வைத்தநாதா் சுவாமி கோயிலில் வைகாசி விசாக பெருவிழாவில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
திருக்குவளையை அடுத்த சித்தாய்மூரில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான தேவார பாடல் பெற்ற அகிலாண்டேஸ்வரி அம்பாள் உடனுறை பொன்வைத்தநாதா் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் வைகாசி விசாக பெருவிழா ஜூன் 8-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று வந்தது.

வைகாசி விசாகத்தையொட்டி பஞ்சமூா்த்திகள் வீதியுலா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. விநாயகா், அகிலாண்டேஸ்வரி அம்பாள் உடனுறை பொன்வைத்தநாதா் சுவாமி, வள்ளி தேவசேனா சமேத வில்லேந்திய வேலவா், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்ச மூா்த்திகள் சிறப்பு மலா் அலங்காரத்தில் எழுந்தருள மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடா்ந்து பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.