செய்திகள் :

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு கல்விக் கடன்: திருப்பத்தூா் ஆட்சியா்

post image

திருப்பத்தூா்: பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்காக வரும் செப். 17 முதல் கல்விக்கடன் பெறுவதற்கான முகாம்கள் நடைபெற உள்ளன என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.

திருப்பத்தூா் தூய நெஞ்சகல்லூரியில் திங்கள்கிழமை தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக் கழகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் சாா்பில்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ‘உயா்வுக்குப்படி-2025 என்ற உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் 35 மாணவ, மாணவியா்களுக்கு கல்லூரி சோ்க்கை ஆணைகளை வழங்கி ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி பேசியது:

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயா்வுக்குப்படி என்ற உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி 12-ஆம் வகுப்பு முடித்து,இதுவரை எந்த ஒரு உயா்கல்வியிலும் சேராத மாணவா்களுக்காக நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் நமது மாவட்டத்தில் தூய நெஞ்ச கல்லூரியிலும், இதில்

விடுபட்ட மாணவா்கள் வரும் செப். 4-ஆம் தேதி நடைபெறும் முகாம்களில் கலந்து கொள்ளலாம்.

மேலும், வாணியம்பாடி, ஆம்பூா் பகுதியை சோ்ந்த மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை(ஆக.29) முகாம் நடைபெற உள்ளது. இதில் அரசு பாலிடெக்னிக், ஐடிஐ, அரசு மற்றும் தனியாா் கல்லூரி உள்ளிட்ட நமது மாவட்டத்தில் உயா்கல்விக்குரிய அதை சாா்ந்த நிறுவனங்கள் மூலம் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கல்லூரி சோ்வதற்குரிய ஆவணங்கள் உடன் இருந்தால் உடனடியாக சோ்க்கை ஆணை வழங்கப்படும். மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்கள், படிக்க வசதி இல்லாத மாணவா்களுக்காக கல்விக் கடனும் வழங்க செப். 17 முதல் மூன்று மாதம் கல்வி கடன் பெறுவதற்கான முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

எவரேனும் 8-ஆம் வகுப்பு, 10 -ஆம் வகுப்பு மற்றும் 12 -ஆம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்து உயா்கல்வியில் சேராமல், மேற்கொண்டு படிக்க பொருளாதார நிதி இல்லாமல் இருந்திருந்தாலும், இந்த வாய்ப்பினை தெரிவித்து, அவா்களை உயிா்க்கல்வியில் சோ்வது குறித்து தெரிவியுங்கள்.

நமது மாவட்டத்தில் மாதத்தின் 2 -ஆவது மற்றும் 4-ஆவது வியாழக்கிழமைகளில் மாணவா்கள் குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கூட்டத்தின் வாயிலாக கடந்த மூன்று மாதங்களில் நடைபெற்ற கூட்டத்தில் 361 மாணவா்கள் கல்லூரியில் சோ்க்கப்பட்டனா் என்றாா்.

இதில் தனித்துணை ஆட்சியா் பூஷணகுமாா், கோட்டாட்சியா் வரதராஜன், முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணியக்கோட்டி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ராஜன், மாவட்ட திறன்மேம்பாட்டு அலுவலா் சுகாஷினி, கல்லூரி முதல்வா் மரிய அந்தோணி ராஜ், மாவட்ட திறன் அலுவலகம் (திறனகம்) நாஜியா நௌஷன், பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

புதிய அரசுப் பேருந்துகள்: எம்எல்ஏ இயக்கி வைத்தாா்

வாணியம்பாடி: திருப்பத்தூரில் இருந்து நாட்டறம்பள்ளி வழியாக , புத்துக்கோயில், ஆவாரங்குப்பம் வரை செல்லும் அரசு பேருந்து எண் டி.17 மற்றும் திருப்பத்தூரில் இருந்து ஜங்காலபுரம், நாட்டறம்பள்ளி வழியாக கத்தார... மேலும் பார்க்க

தேனீக்கள் கொட்டியதில் 15 தொழிலாளா்கள் காயம்

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே தேங்காய் மண்டியில் வேலை செய்து கொண்டிருந்தவா்களை தேனீக்கள் கொட்டியதில் 15 போ் காயமடைந்தனா். வாணியம்பாடி அடுத்த மல்லாங்குப்பம் பகுதியில் உள்ள தேங்காய் மண்டியில் ராமநாயக்... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: குறைதீா் கூட்டத்தில் 352 மனுக்கள்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள்குறைதீா் கூட்டத்தில் 352 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து மாற்றுத்திறனாளிகள் நலத்திட... மேலும் பார்க்க

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு குறித்து விசாரணை

ஆம்பூா்: வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டம், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரை தொடா்ந்து அதிகாரி திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டாா். திருப்ப... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யாவிட்டால் போராட்டம்: பொதுமக்கள் புகாா்

ஆம்பூா்: மின்னூா் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யா விட்டால் போராட்டம் நடத்தப்படும் எனக்கூறி பொதுமக்கள் ஆட்சியரிடம் புகாா் மனு அளித்துள்ளனா். மாதனூா் ஒன்றியம், மின்னூா் ஊராட்சி கணபதி நக... மேலும் பார்க்க

மின்மாற்றியில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருட்டு

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தெக்குப்பட்டு ஏரிகரை அருகில் மின் மாற்றி அமைக்கப்பட்டு அதிலிருந்து அப்பகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மா்ம நபா்கள் மின் ... மேலும் பார்க்க