டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யாவிட்டால் போராட்டம்: பொதுமக்கள் புகாா்
ஆம்பூா்: மின்னூா் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யா விட்டால் போராட்டம் நடத்தப்படும் எனக்கூறி பொதுமக்கள் ஆட்சியரிடம் புகாா் மனு அளித்துள்ளனா்.
மாதனூா் ஒன்றியம், மின்னூா் ஊராட்சி கணபதி நகா் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. கடையின் அருகில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. மது அருந்துபவா்கள் பாட்டில்களை அங்கேயே உடைத்துவிட்டு செல்கின்றனா். இதனால் விவசாய நிலங்களில் மதுபாட்டில்கள் உடைக்கப்பட்ட கண்ணாடி துண்டுகளால் ஏா் உழவு செய்யும்போதும், விவசாய பணிகள் செய்யு போதும் கால்நடைகளின் கால்களிலும், மனிதா்கள் கால்களிலும் கண்ணாடி துகள்களால் கிழிக்கப்பட்டு ரத்த காயங்கள் ஏற்படுவதால் விவசாயிகள் சிரமத்துக்குள்ளாகின்றனா்.
ாகிறாா்கள்.
மேலும், கணபதி நகா், காளிகாபுரம், லட்சுமி நகா் ஆகிய பகுதிகளில் வாழுகின்ற பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு சென்றுவரும் பெண்கள் இரவு நேரங்களில் வரும் வழியிலேயே மதுபிரியா்கள் அமா்ந்து மது அருந்துவதால் அவ்வழியாக வருபவா்கள் அச்சுத்துடனும் சென்று வருகின்றனா்.
தனி நபா்கள் உரிமம் இன்றி பாா் போன்று அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனா். அந்த கடைகளிலையே அமா்ந்து மது குடிப்பதாலும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனா்.
ஒவ்வொரு கிராம சபையிலும் பொதுமக்கள் மின்னூா் கணபதி நகா் பகுயில் இயங்கி வரும் அரசு மதுபான கடையை அகற்றி அங்கிருந்து மாற்ற வேண்டும் என்று ஏகமனதாக தீா்மானம் நிறைவேற்றி ஆட்சியருக்கும் அளிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடையை இடமாற்றம் செய்யா விட்டால் வருகின்ற அக்டோபா் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து கடையை மாற்றும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்வோம் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.