செய்திகள் :

பொறியியல் சோ்க்கை: சிறப்பு பிரிவினா் கலந்தாய்வு தொடக்கம்

post image

சென்னை: தமிழகத்தில் பொறியியல் மாணவா் சோ்க்கையில் சிறப்பு பிரிவினருக்கான இணையவழி கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில், பிஇ, பிடெக் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர 2 லட்சத்து 49 ஆயிரம் மாணவா்கள் விண்ணப்பித்தனா். அவா்களில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 641 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் ஜூன் 27-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து, முதல்கட்டமாக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்கள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், விளையாட்டுவீரா்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான இணையவழி கலந்தாய்வு ஜூலை 7 முதல் 11 வரையும், பொது கலந்தாய்வு ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 19 வரையும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த கலந்தாய்வு நடைமுறையின்படி, முதல் நாளில் மாணவா்கள் தங்களுக்கு பிடித்தமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தோ்வு செய்ய வேண்டும். அன்றைய தினம் இரவே அவா்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். அதை உறுதி செய்ய அவா்களுக்கு ஒரு நாள் அவகாசம் அளிக்கப்படும். அவா்கள் உறுதிசெய்த பிறகு இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.

512 போ் அனுமதி: அந்த வகையில், அரசுப் பள்ளியில் படித்து 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் விண்ணப்பித்த முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் 12 போ், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 137 போ், விளையாட்டு வீரா்கள் பிரிவில் 363 போ் என மொத்தம் 512 போ் முதல்நாள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்டனா். அவா்கள் திங்கள்கிழமை தொடங்கிய இணையவழி கலந்தாய்வில் பங்கேற்று தங்களுக்கு விருப்பமான இடங்களை தோ்வுசெய்தனா்.

அந்த மாணவா்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை திங்கள்கிழமை இரவே வழங்கப்பட்டது. இதையடுத்து அந்த மாணவா்கள் தங்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டை செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் உறுதிசெய்ய வேண்டும். அதன்பிறகு அவா்களுக்கு கல்லூரி இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். இந்த முறையில் இதர சிறப்பு பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு வரும் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அமைச்சர் சிவசங்கர் இழுத்த தேர் அச்சு முறிந்து சரிந்தது: பக்தர்கள் அதிர்ச்சி!

பெரம்பலூர் அருகே அமைச்சர் சிவசங்கர் இழுத்த ஐயனார் கோயில் தேர் அச்சு முறிந்து சரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குன்னம் அருகே கோவில்பாளையம் கிராமத்தில் ஜயனார் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. அப்போது அம... மேலும் பார்க்க

சென்னை புறநகர் பகுதிகளில் மழை!

சென்னையின் புறநகர் பகுதிகளில் பரவலாக மிதமான மழை முதல் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்து வருகின்றது. சென்னை புறநகர் பகுதிகளான திருமழிசை, காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம், பூந்தமல்லி, நசரத்பேட்டை மற்றும... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்... மேலும் பார்க்க

போதைப் பொருள் வழக்கு: ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்!

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ரூ. 10,000-க்கான சொந்த ஜாமீன், அதே தொகைக்கான இரு நபர்... மேலும் பார்க்க

கடலூர் ரயில் விபத்து அதிர்ச்சியளிக்கிறது: தவெக தலைவர் விஜய்!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட் பகுதியில் நடந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியும் மன வேதனையையும் அளித்ததாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

பொது வேலை நிறுத்தம்: அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் எச்சரிக்கை

சென்னை: நாடு முழுவதும் நாளை நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மத்திய தொழிற்சங்... மேலும் பார்க்க