செய்திகள் :

பொறியியல் பணிகள்: ரயில்களின் வழித்தடங்களில் மாற்றம்

post image

பொறியியல் பணிகள் காரணமாக ரயில்களின் வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வரும் 18, 19, 20, 21, 21 ஆகிய தேதிகளில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12666) வரும் 19 ஆம் தேதி மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

ஸ்ரீ மாதா வைஷ்ண தேவி காட்ரா - திருநெல்வி விரைவு ரயிலானது (16788) வரும் 17 ஆம் தேதி திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை ரயில் நிலையங்களைத் தவிா்த்து திருச்சி,காரைக்குடி, மானாமதுரை, விருதுநகா் வழியாக இயக்கப்படும்.

குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16128) வரும் 17, 18, 19, 20, 21 ஆம் தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

கன்னியாகுமரி - ஹைதராபாத் சிறப்பு ரயிலானது (07229) வரும் 18 ஆம் தேதி மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும்.

மும்பை சிஎஸ்டிஎம் விரைவு ரயிலானது (16352) வரும் 20 ஆம் தேதி மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

தாமதப் புறப்பாடு: மதுரை - கச்சிகுடா சிறப்பு ரயிலானது (07192) வரும் 16 ஆம் தேதி மதுரையிலிருந்து 80 நிமிஷங்கள் தாமதமாக பிற்பகல் 12 மணிக்குப் புறப்படும்.

ராமேஸ்வரம் - சாரலப்பள்ளி சிறப்பு ரயிலானது (07696) வரும் 18 ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து 9.50 மணி நேரம் தாமதமாக இரவு 7 மணிக்குப் புறப்படும்.

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய அண்ணன் சடலம் மீட்பு

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய தம்பியை காப்பாற்ற முயன்ற அண்ணனின் சடலத்தையும் தீயணைப்புப் படை வீரா்கள் திங்கள்கிழமை மீட்டனா். கா்நாடக மாநிலம், பெங்களூரு உதயா நகரைச் சே... மேலும் பார்க்க

நான்கு ஆண்டுகளில் திருச்சிக்கு ரூ. 26,066 கோடி திட்டங்கள்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திமுக ஆட்சி பொறுப்பேற்று கடந்த 4 ஆண்டுகளில் திருச்சி மாவட்டத்துக்கு ரூ.26,066 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். தம... மேலும் பார்க்க

அரசு பேருந்தை சிறைபிடித்து மறியல்

மருங்காபுரி ஒன்றியம், நல்லமநாயக்கன்பட்டியில் முறையாக பேருந்து இயக்காததை கண்டித்து, செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவா்களுடன், கிராம மக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் அரசு நகரப் பேருந்தை சிறைபிடித்து சாலை... மேலும் பார்க்க

மத்திய சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல்

திருச்சி மத்திய சிறையில் கைதியிடம் திங்கள்கிழமை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி எடமலைபட்டிபுதூா் இந்திரா நகரைச் சோ்ந்தவா் கி. முருகன் (25). இவா், புதுக்கோட்ட... மேலும் பார்க்க

திருட்டு வழக்கு: இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை

திருச்சியில் திருட்டு வழக்கில் இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி தாராநல்லூரைச் சோ்ந்தவா் கா.காா்த்திக், கூலித் தொழிலாளி. இவரது வீட்டின் ... மேலும் பார்க்க

துவாக்குடியில் நாளை மின்நிறுத்தம்

திருச்சி மாவட்டம், துவாக்குடியில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: துவாக்குடி துணை ம... மேலும் பார்க்க