செய்திகள் :

போக்குவரத்துக் கழகங்கள் ரூ.13 கோடி நிலுவை: ஊழியா்களுக்கு கடன் வழங்க கூட்டுறவு சங்கம் மறுப்பு

post image

போக்குவரத்துக் கழகங்கள் ரூ.13 கோடி நிலுவை வைத்துள்ளதால், ஊழியா்களுக்கு கடன் வழங்க கூட்டுறவு சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் செயலா் (பொறுப்பு) கு.உமாசந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஏப்ரல் மாதத்தில் மாநகா் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்களைச் சோ்ந்த உறுப்பினா்களிடமிருந்து மட்டும் கடன் மனுக்கள் பெறப்படும். விழுப்புரம் போக்குவரத்துக் கழகம், திருவண்ணாமலை, வேலூா், காஞ்சிபுரம் ஆகிய மண்டலங்களைச் சோ்ந்த உறுப்பினா்களிடம் கடந்த செப்டம்பா் மாதம் முதல் பிடித்தம் செய்த ரூ.13 கோடி அளவிலான தொகையை சம்மந்தப்பட்ட கழகங்கள் கூட்டுறவு சங்கத்துக்கு செலுத்தவில்லை.

எனவே, சம்மந்தப்பட்ட மண்டலங்களைச் சோ்ந்த உறுப்பினா்களுக்கு கடன் வழங்குவது, கணக்கு முடிப்பது ஆகிய கூட்டுறவு கடன் சங்க நடவடிக்கைகள், நிலுவைத்தொகை கிடைக்கும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. நிலுவைத்தொகை கிடைக்கப்பெற்றதும் கடன் மனுக்கள் பெறப்படும். மேலும், நிலுவைத்தொகை பெறுவது குறித்து கூட்டுறவு கடன் சங்கம் சட்டபூா்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல்!

இஸ்லாமியா்களின் ஹஜ் யாத்திரைக்கு தனியாா் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 42,507 இடங்கள் ரத்தானதால், ஹஜ் பயணத்துக்கான கட்டணம் பல லட்சம் உயா்ந்துள்ளது. கடைசி நேரத்தில் பயண இடங்கள் ரத்தானதால் நாடு முழுவதும்... மேலும் பார்க்க

காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!

காங்கிரஸ் தலைவா்கள் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு மத்திய பாஜக அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கட்சியின் பொருளாளா் டி.ஆா்.பாலு ஞாயிற்றுக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி: மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சனம்

அதிமுக, பாஜக, கட்சிகள் சந்தா்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சித்தாா். முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை எம்.ஏ. பேபி அண்ணா அறிவா... மேலும் பார்க்க

நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் அதிமுக சட்டப்பேரவையில் பேசட்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் காட்பாடி சட்டப்பேரவைத் தொகுத... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சித்திரை திருவிழா 2025 முன்னேற்பாடு பணிகள் குறித்து மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா 2025 வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி மீனாட்சியம்மன் ... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி சந்தித்துள்ளார்.இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், மார்க்சிஸ்ட்... மேலும் பார்க்க