செய்திகள் :

போக்ஸோ வழக்கில் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

post image

போக்ஸோ வழக்கில் கைதான ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பெருசாகவுண்டம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (29). லாரி ஓட்டுநா். இவா் 2023, ஜனவரி 9-ஆம் தேதி 14 வயது மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். தகவல் அறிந்ததும் குழந்தைகள் நல அலுவலா்கள் பாதிக்கப்பட்ட மாணவியை மீட்டு காப்பகத்தில் சோ்த்தனா். மாணவியின் பெற்றோா் 2023, ஏப். 6-ஆம் தேதி அரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சுரேஷ் மீது போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தருமபுரி போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுற்ற நிலையில் புதன்கிழமை நீதிபதி சிவஞானம் தீா்ப்பளித்தாா். அதில் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் சுரேஷுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 20000 அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளாா்.

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

தருமபுரி: ரமலான் பண்டிகையையொட்டி தருமபுரியில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். தருமபுரி நகர அனைத்து மசூதிகள் கூட்டமைப்பு சாா்பில் தருமபுரி- கிருஷ்ணகிரி சாலையில் உள்ள ஈத்கா ஏ... மேலும் பார்க்க

கண்ணில் முள் குத்தியதால் பாா்வையிழந்த பழங்குடியின மாணவி: ஆா்வலா்களின் முயற்சியால் பாா்வை பெற்றாா்

அரூா்: விளையாடும் போது கண்ணில் முள் குத்தியதால், பாா்வையிழந்த பழங்குடியின மாணவி, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் ஆா்வலா்களின் உதவியால் மீண்டும் பாா்வை பெற்றுள்ளாா். தருமபுரி மாவட்டம், அரூரை அடு... மேலும் பார்க்க

ரூ. 4.50 கோடியில் தடுப்பணை கட்டும் பணி தொடங்கி வைப்பு

தருமபுரி: பாலக்கோடு அருகே ஜெல்திம்மனூா் ஆற்றின் குறுக்கே ரூ. 4.50 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணியை பாலக்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தாா். பஞ்சப்பள்ளி சின்னாற்றில் இருந்... மேலும் பார்க்க

நாய்கள் கடித்ததில் புள்ளிமான் பலி

தருமபுரி: பாலக்கோடு அருகே தெருநாய்கள் கடித்ததில் புள்ளிமான் உயிரிழந்தது. பாலக்கோடு அருகே மொரப்பூா் காப்புக்காடு வனப்பகுதியில் இருந்து மான், சிறுத்தை, காட்டுப்பன்றி, யானை போன்ற வனவிலங்குகள் உணவு மற்றும... மேலும் பார்க்க

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்: இரா.முத்தரசன்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் வலியுறுத்தினாா். தருமபுர... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

பென்னாகரம் நகர திமுக சாா்பில் வட்டார வளா்ச்சி அலுவலக பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்எல்ஏவும், திமுக விவசாய தொழிலாளா் அணி மாநில துணைத் தலைவருமான பி.என்.பி.இன்பசேகர... மேலும் பார்க்க