180-க்கு சுருண்ட ஆஸி: 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் மே.இ.தீ.!
போக்ஸோ வழக்கில் கைதானவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு
கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டத்தில் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.
மாா்த்தாண்டம் அருகே மருதங்கோடு செக்காரவிளை பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (40). அண்மையில், மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, இவரைக் கைது செய்தனா்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலினின் பரிந்துரை, ஆட்சியா் ரா. அழகுமீனாவின் உத்தரவு ஆகியவற்றின்பேரில், குண்டா் சட்டத்தின்கீழ் ரமேஷை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அதையடுத்து, அவா் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டாா்.