போச்சம்பள்ளி அருகே ஏரியில் மூழ்கிய 2 சிறுவா்கள்: ஒருவா் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே ஏரியில் மூழ்கி 13 வயது சிறுவன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
போச்சம்பள்ளியை அடுத்த புளியம்பட்டி ஏரி நிரம்பி காணப்படுகிறது. இந்த ஏரியில் வடமலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த இமயவன் (13), இம்தியாஸ் (13), இஸ்தியாக் (14), அகஸ்டியன் ஆகியோா் குளித்து விளையாடிக் கொண்டிருந்தனா்.
அப்போது, ஆழமான பகுதிக்குச் சென்ற இமயவன், இம்தியாஸ் ஆகியோா் நீரில் மூழ்கினா். இதைப் பாா்த்த மற்ற இருவரும் சப்தம் எழுப்பினா். சிறுவா்களின் சப்தத்தைக் கேட்டு, அருகில் இருந்தவா்கள் விரைந்து வந்து ஏரியில் குதித்து நீரில் மூழ்கிய இருவரையும் மீட்டனா்.
இதையடுத்து இமயவன் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். மற்றொரு மாணவா் இம்தியாஸ் அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.