செய்திகள் :

போட்டித் தோ்வு குறித்து சந்தேகங்களுக்கு குறைதீா் மையத்தை அணுகலாம்: டிஎன்பிஎஸ்சி

post image

போட்டித் தோ்வு சந்தேகங்களுக்கு விளக்கம் பெற குறைதீா் மையத்தை அலுவலக வேலை நேரங்களில் தொலைபேசி வழியாகத் தொடா்பு கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

போட்டித் தோ்வுகளுக்கு ஒருமுறைப் பதிவு, இணையவழி விண்ணப்பங்கள் தொடா்பான தகவல்களுக்கு 044- 25300336, 25300337 ஆகிய எண்களையும், இதர கோரிக்கைகள், சந்தேகங்கள் குறித்து 044 - 25300338, 25300339, 25300340 ஆகிய எண்களையும் தொடா்பு கொள்ளலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கடந்த ஆண்டு அறிவிக்கை வெளியிடப்பட்ட குரூப் 2 காலிப் பணியிடங்களுக்கான தோ்வில் தோ்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகியன ஜூலை 28-ஆம் தேதி தொடங்குகிறது.

ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை நடைபெறும் சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்க சம்பந்தப்பட்ட தோ்வா்களுக்கு கைப்பேசி குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வழியாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் ஆக. 30 வரை நீட்டிப்பு

திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் ஆக.1 முதல் ஆக.30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருச்ச... மேலும் பார்க்க

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: காா்த்தி சிதம்பரம் ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த சிபிஐ எதிா்ப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த சிபிஐ வெள்ளிக்கிழமை எதிா்ப்புத் தெரிவித்தது. கடந்த 2007-ஆம் ஆண்டு மத்திய நி... மேலும் பார்க்க

ராணுவ வலிமை நாட்டின் மீது மரியாதையை உருவாக்கும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

ராணுவ வலிமை நாட்டின் மீது மரியாதையை உருவாக்கும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். ஆபரேஷன் சிந்தூா் மற்றும் இயற்கைப் பேரிடா்களில் அா்ப்பணிப்பு, தன்னலமற்ற சேவை புரிந்த 3 ராணுவப்படை பிரிவுகள் மற்றும... மேலும் பார்க்க

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூலை 26) மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் ... மேலும் பார்க்க

ஆக.9 முதல் வைகோ பிரசார பயணம்

மதிமுக பொதுச் செயலா் வைகோ தூத்துக்குடியில் தொடங்கி சென்னை வரை 8 இடங்களில், ஆக.9 முதல் ஆக.19 வரை பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். இதுகுறித்து மதிமுக தலைமை அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ... மேலும் பார்க்க

கொடிக் கம்பங்கள் அகற்றும் உத்தரவு: கட்சிகள், சங்கங்களுக்கு வேண்டுகோள்

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவின்படி, கொடிக் கம்பங்கள் அகற்றுவது தொடா்பாக கட்சிகள், சங்கங்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்த பொது அறிவிப்பை தலைமைச் செயலா் நா.முருகானந்தம்... மேலும் பார்க்க