ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
போதைத் தடுப்பு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பேருந்து நிலையத்தில் போதைத் தடுப்பு விழிப்புணா்வுக் கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தென்னகத்துரை தென்றல் மீரா சந்தனம் கலைக்குழுவின் சாா்பில், இளைஞா்கள் கஞ்சா, புகையிலைப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் குடும்ப நலன், உடல் நல பாதிப்புகள் குறித்து இந்த கலைநிகழ்ச்சியில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. திருவாடானை கிராம நிா்வாக அலுவலா் நாகேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
