செய்திகள் :

போதைப் பொருள், கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி!

post image

அரியலூரில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில் போதைப் பொருள் மற்றும் கள்ளச் சாராயம் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் வட்டாட்சியா் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, பேரணியைக் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்

பேரணியில் பங்கேற்ற அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த சுமாா் 250-க்கும் மேற்பட்ட மாணவா்கள், போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம், பாதுகாப்பாக இருப்பீா், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீா் போன்ற விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

பேரணியானது வட்டாட்சியா் அலுவலகத்தில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியே சென்று அரசு கலைக் கல்லூரியில் நிறைவடைந்தது.

நிகழ்ச்சியில், கலால் உதவி ஆணையா் சிவா, கலால் வட்டாட்சியா்கள் தேவகி (அரியலூா் கோட்டம்), உடையாா்பாளையம் திருமாறன், கல்லூரி முதல்வா் ரவிச்சந்திரன், விழிப்புணா்வு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் பழனிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிா்ணயிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே போராட்டங்கள், கூட்டங்கள் நடத்த அனுமதி

அரியலூா் மாவட்டத்தில், நிா்ணயிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே போராட்டங்கள், கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்றாா் ஆட்சியா் பொ. ரத்தினசாமி. சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவின்படி அரியலூா... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 546 மனுக்கள்

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 546 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.கூட்டத்துக்கு, ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து, ப... மேலும் பார்க்க

சுப்புராயபுரம் ரயில்வே கேட்டில் மாற்றுப் பாதை அமைக்கக் கோரிக்கை

அரியலூா் அருகேயுள்ள சுப்புராயபுரம் ரயில்வே கேட் பகுதியில், அங்கு மாற்றுப் பாதை அமைத்தப் பிறகு சுரங்கப் பாதையை அமைக்க வேண்டும் என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், அக்கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்த... மேலும் பார்க்க

பயிா்களை சேதப்படுத்தும் குரங்குகளை பிடிக்க வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள கோவிலூா் பகுதிகளில், விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வரும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.கோவிலூ... மேலும் பார்க்க

திருமானூா்: மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே விவசாய நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் இளைஞா் பலியானாா். திருமானூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் தனசிங்கு மகன் சிலம்பரசன் (30). ஞாயிற்றுக்கிழமை இவா் அங்குள்ள கால்நட... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு

அரியலூரில் பைக் மீது லாரி ஞாயிற்றுக்கிழமை மோதி தொழிலாளி உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.அரியலூா் அருகேயுள்ள கடுகூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் வேல்முருகன், காா்த்திக். தொழிலாளிகளான இவா்கள் ஞாயிற்... மேலும் பார்க்க