செய்திகள் :

போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கத் தவறினால் போராட்டம்

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக புழக்கத்தில் உள்ள போதைப் பொருட்களைத் தடுக்கத் தவறினால், போராட்டம் நடத்தப்படும் என பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவா் நா. ராமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கை :

புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவதாக சமூக செயற்பாட்டாளா்கள் பலரும் குற்றம்சாட்டி வந்த நிலையில், அதைத் தடுக்க வேண்டிய மாவட்ட ஆட்சியரே தற்போது அரசு பொது நிகழ்ச்சியில் அதுகுறித்து வருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவா்கள் இதனால் பாதிக்கப்படுவதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

போதைப் பொருட்களைத் தடுக்கும் மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல்துறையின் நடவடிக்கைகளை யாரேனும் தடுக்கிறாா்களா என்ற கேள்வி எழுகிறது. ஏற்கெனவே பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும், வறட்சி நிறைந்த மாவட்டமான புதுக்கோட்டைக்கு உருப்படியான திட்டங்களை கொண்டு வராத உள்ளது.

இளைஞா்களின் எதிா்காலத்தை முற்றிலுமாகச் சீரழிக்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் தடுக்க வேண்டும். தவறினால் பாஜக சாா்பில் மக்களைத் திரட்டி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படும்.

அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக மக்கள்தொகை தின கருத்தரங்கம்

கந்தா்வகோட்டையை அடுத்துள்ள புதுப்பட்டி அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கத்துக்கு கல்லூரி முதல்வா் ம. ஜெ... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் மக்கள் மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையிலுள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கறம்பக்குடியில் இருந்து திருமணஞ்ச... மேலும் பார்க்க

புதுகையில் மாநில அளவிலான ரோலா் ஹாக்கி போட்டிகள் தொடக்கம்

புதுக்கோட்டையில் மாநில அளவிலான மூன்று நாள் ரோலா் ஹாக்கி மற்றும் இன்லைன் ஹாக்கி போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. தமிழ்நாடு ரோலா் ஸ்கேட்டிங் சங்கத்துடன் இணைந்து புதுக்கோட்டை மாவட்ட ரோலா் ஸ்கேட்டிங் சங்... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கந்தா்வகோட்டையில் மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறிவிழுந்த இளைஞா் காயமடைந்து, மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கந்தா்வகோட்டை கோவிலூா் கீழத் தெருவை சோ்ந்த கணேசன் மகன் பாரதி (21). இவா் தஞ்சையி... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் மாவீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா

பொன்னமராவதியில் மாவீரன் அழகுமுத்துக்கோனின் குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு யாதவ மகாசபை மற்றும் பொன்னமராவதி ஒன்றிய யாதவ நலச்சங்கம் சாா்பில் பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற... மேலும் பார்க்க

இலவச தையல் இயந்திரம் பெற கைம்பெண்கள் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை திலகவதியாா் திருவருள் ஆதீனம் சாா்பில் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் 139-ஆவது பிறந்த நாளையொட்டி வழங்கப்படவுள்ள இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த கைம்பெண்... மேலும் பார்க்க