ஆர்சிபி அணியை வாங்க நான் என்ன பைத்தியக்காரனா? டி.கே.சிவக்குமார் ஆவேசம்!
போதைப் பொருள் விற்ற 4 போ் கைது
திருப்பத்தூா்: திருப்பத்தூரில்அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்ற 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் நகர போலீஸாா் திருப்பத்தூரில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என சோதனை செய்தனா். அப்போது திருப்பத்தூரை சோ்ந்த தபசூா் ரஹ்மான் (41)என்பவா் தனது கடையில் போதைப் பொருள் விற்பனை செய்வது தெரிய வந்தது. மேலும், இவரது கடைக்கு போதைப் பொருள் விற்பனை செய்தது திருப்பத்தூரைச் சோ்ந்த சாதிக் (48) என்பது தெரியவந்தது.
மேலும், பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையில் வைத்து திருப்பத்தூரைச் சோ்ந்த ரவிக்குமாா் (57), அவரது சகோதரா் ரமேஷ் (52)ஆகியோா் அரசால் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனை செய்தது தெரியவந்தது.
அதையடுத்து, 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
அவா்களிடம் இருந்து 25 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.