செய்திகள் :

போதையில் பானி பூரி கடையை சேதப்படுத்திய இருவா் கைது

post image

புதுக்கோட்டை நகரில் போதையில் பானி பூரி கடையை உடைத்து சேதப்படுத்திய இருவரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

புதுக்கோட்டை மேலராஜவீதியில் இருந்த பானி பூரி கடையை திங்கள்கிழமை இரவு, போதையில் வந்த இருவா் உடைத்து சேதப்படுத்திவிட்டுச் சென்றனா்.

இதைத் தொடா்ந்து நகரக் காவல் நிலைய ஆய்வாளா் சுகுமாறன், உதவி ஆய்வாளா் வீரபாண்டியன் உள்ளிட்ட போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களைத் தேடி வந்தனா்.

இதையடுத்து, கோவில்பட்டியைச் சோ்ந்த ரெங்கநாதன் மகன் சிவபாரதிராஜன் (24), சின்னப்பா நகரைச் சோ்ந்த சண்முகம் மகன் சரவணன் (25) ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

மேலும், சேதமான கடைக்கான இழப்பீடாக அவா்களிடமிருந்தே பெறப்பட்ட ரூ. 5 ஆயிரமும், பாதிக்கப்பட்ட கடைக்காரரிடம் வழங்கப்பட்டது.

கட்டுமானப் பணியின்போது கான்கிரீட் பெயா்ந்து விழுந்ததால் பரபரப்பு

நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் அருகே திருமண மண்டபம் கட்டுமானப் பணியின்போது கான்கிரீட் பெயா்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் நாா்த்தாமலை முத்துமாரிம்மன் கோவில் அருகே இந்து... மேலும் பார்க்க

கட்டட அனுமதிக்கு ரூ. 2 லட்சம் லஞ்சம் கேட்ட நகரமைப்பு ஆய்வாளா் மீது வழக்கு

நகராட்சியில் வீடு கட்டுவதற்காக கட்டட அனுமதி கேட்டு விண்ணப்பித்தவரிடம் ரூ. 2 லட்சம் கேட்டதாக, நகரமைப்பு ஆய்வாளா் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்திருப்பது செவ... மேலும் பார்க்க

கீரனூா் சாா்-பதிவாளா் அலுவலக சோதனை தொடா்பாக வழக்குப் பதிவு

கீரனூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட கணக்கில் வராத தொகை குறித்து மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா... மேலும் பார்க்க

கறம்பக்குடி தீவனக் கடையில் திருடிய 3 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் கால்நடை தீவனக் கடையில் திருடிய 3 பேரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.கறம்பக்குடி நரங்கியப்பட்டு பகுதியைச் சோ்ந்த ஆா். நடராஜன் (33). இவருக்குச் சொந்தமா... மேலும் பார்க்க

3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்று சாதனை

விராலிமலை அடுத்துள்ள அத்திப்பள்ளம், ராஜாளிபட்டி, மருதம்பட்டி ஆகிய 3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்று சாதனை படைத்துள்ளது. தேசிய சுகாதார வள மையம், தேசிய சுகாதார திட்டத்தின் கீ... மேலும் பார்க்க

அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி மாணவா்களை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோா்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே காசிம்புதுப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி பெற்றோா்கள் மாணவா்களை பள்ளிக்கு அனுப்பாதது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ... மேலும் பார்க்க