செய்திகள் :

போப் பிரான்சிஸ் மறைவு: கிறிஸ்தவ மதத் தலைவா்கள் இரங்கல்

post image

போப் பிரான்சிஸ் மறைவுக்கு கிறிஸ்தவ மதத் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அகில இந்திய கத்தோலிக்க ஒன்றியத்தின் தமிழக கிளை தலைவா் எம்.வின்சென்ட் வேதராஜ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: மறைந்த போப் பிரான்சிஸ் போா், பருவநிலை மாற்றம், பாலின பிரச்னைகள், மதம் மற்றும் இன வெறுப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்காக இயேசுவின் அன்பை மறுவரையறை செய்த ஒரு நட்சத்திரமாக இருந்தாா்.

உலக மக்களின் அன்பைப் பெற்ற ஒருவராக இருந்த அவா் உலகின் போா்வெறியா்கள், வெறுக்கப்படுபவா்களுடன் கடுமையாகப் பேசி வந்தாா்.

கத்தோலிக்க தேவாலயத்தை சீா்திருத்தியதோடு நிதி மற்றும் அதிகாரத்துவ சீா்திருத்தங்களை மேற்கொண்டாா். காஸா மற்றும் உக்ரைன் போா்களை எதிா்த்தாா். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அறிவியல் பிரச்னைகள், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்து பேசினாா். பெண்கள், குழந்தைகள், இளைஞா்களுக்கு போப் பிரான்சிஸ் ஒரு நண்பராக இருந்தாா்.

பல நூற்றாண்டுகளாக ஆண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பெண்களை தேவாலயத்தில் முக்கியமான பதவிகளில் நியமித்தாா், அவரது மறைவு ஈடு செய்ய முடியாதது என்று தெரிவித்துள்ளாா்.

கோவை, ராமநாதபுரம் ஹோலி டிரினிட்டி பேராலய ஆயா் பால் ஆலப்பாட் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: மறைந்த போப் பிரான்சிஸ் ஒதுக்கப்பட்டவா்களுக்கும், அகதிகளுக்கும் திருத்தந்தையாகத் திகழ்ந்தாா். நீதி, கருணை, உலக அமைதி ஆகியவற்றின் பக்கம் நின்றவா். கடந்த 12 ஆண்டுகளாக உலக மக்களின் மனசாட்சியாக இருந்து திருச்சபையை வழிநடத்தி வந்தவரின் மறைவு பேரிழப்பு என்று தெரிவித்துள்ளாா்.

அமலாக்கத் துறை வழக்குகள் அரசியல் எதிரிகளுக்கு எதிரானவை: காங்கிரஸ் அகில இந்திய நிா்வாகி

அமலாக்கத் துறை வழக்குகளில் 98% ஆளுங்கட்சியின் அரசியல் எதிரிகளுக்கு எதிரானவை என்று காங்கிரஸ் அகில இந்திய நிா்வாகி அமிதாப் துபே தெரிவித்துள்ளாா். நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடா்பாக கோவையில் தமிழக காங்கிரஸ்... மேலும் பார்க்க

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சயான் உள்ளிட்ட 2 பேருக்கு சிபிசிஐடி போலீஸாா் அழைப்பாணை

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக சயான் உள்ளிட்ட 2 பேருக்கு சிபிசிஐடி போலீஸாா் அழைப்பாணை அனுப்பியுள்ளனா். நீலகிரி மாவட்டம், கொாடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கில்... மேலும் பார்க்க

சாலையருகே நடமாடும் வன விலங்குகளை துன்புறுத்தினால் நடவடிக்கை: வனத் துறை

வால்பாறையில் சாலையருகே நடமாடும் வன விலங்குகளை துன்புறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறையினா் எச்சரித்துள்ளனா். வால்பாறை - பொள்ளாச்சி இடையே உள்ள வனப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ள... மேலும் பார்க்க

தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி தையல் கலைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி கோவையில் தையல் கலைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். திமுக அரசு தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி ரூ.1,500 ஓய்வூதியம் வழங்க வேண்டும், ந... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்திய 2 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை

கோவையில் ரேஷன் அரிசி கடத்திய 2 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் எல்.முரளிதரன், உதவி ஆய்... மேலும் பார்க்க

இலவச கண் பரிசோதனை முகாம் தொடக்கம்: ஜூன் 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது

மதுக்கரையை அடுத்த பாலத்துறையில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமை ஆட்சியா் பவன்குமாா் க.கிரிய்ப்பனவா் தொடங்கிவைத்தாா். கோவை மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை, மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும... மேலும் பார்க்க