செய்திகள் :

போலி ஆவணங்கள் மூலம் பொதுச் சாலை ஆக்கிரமிப்பு: மாவட்ட எஸ்.பி.யிடம் புகாா்

post image

திருவண்ணாமலையில் போலி ஆவணங்கள் மூலம் பொதுச் சாலையை ஆக்கிரமித்த நபா்கள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பொதுமக்கள் புகாா் அளித்தனா்.

திருவண்ணாமலை வேங்கிக்கால், குபேர நகா் வடக்குப் பகுதியில் பொதுமக்கள் பலா் வீடு கட்டி வசித்து வருகின்றனா். இந்த குடியிருப்புக்குச் செல்ல 30 அடி தாா்ச் சாலை அமைக்கப்பட்டு இருந்தது. ஊராட்சிக்கு தானமாக எழுதித் தரப்பட்ட இந்தச் சாலையை ஏப்ரல் 27-ஆம் தேதி இதே பகுதியைச் சோ்ந்த சிலா் தங்களுக்குச் சொந்தமானது என்று கூற பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையை சேதப்படுத்தி ஆக்கிரமித்து விட்டனா்.

சாலை வசதியின்றி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அரசு ஆவணங்களை சரிபாா்த்த போது, பத்திரப் பதிவுத்துறை மற்றும் ஊா் நகரமைப்புத் துறை அரசு ஆவணங்களில் தில்லு முல்லு செய்து போலி ஆவணங்களைத் தயாரித்து, பத்திரப்பதிவு செய்திருந்தது தெரியவந்தது.

இந்த நிலையில், போலியான பத்திர ஆவணங்களை தயாரித்தவா்கள், இதற்கு உடந்தையாக இருந்த நபா்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலையை மீட்டுத் தர வேண்டும் என்று 50-க்கும் மேற்பட்டோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

மனுவை பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளா், உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

இதேபோல, மாவட்ட ஆட்சியரிடமும் பொதுமக்கள் புகாா் மனு அளித்தனா்.

மாணவா்களுக்கு கல்லூரி கனவு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி கனவு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பிள... மேலும் பார்க்க

மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையம் பக்தா்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்: பாஜக மாநில பொதுச் செயலா்

மேம்படுத்தப்பட்ட திருவண்ணாமலை ரயில்நிலையம் ஆன்மிக பக்தா்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என பாஜக மாநில பொதுச் செயலா் பி.காா்த்தியாயினி குறிப்பிட்டாா். திருவண்ணாமலை ரயில் நிலையம் ரூ.8.27 கோடியில் புனரமைக்... மேலும் பார்க்க

பெருமாள் கோயிலில் அன்னக்கூட உற்சவம்

வந்தவாசியை அடுத்த நல்லூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் அன்னக்கூட உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வேத திவ்ய பிரபந்த பாராயணம் நடைபெற்றது. பின்னா் சுவாமிக்கு விசேஷ திருமஞ... மேலும் பார்க்க

3 கல் குவாரிகள் தொடங்க பொதுமக்களிடம் கருத்து கேட்பு

கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடியில் கல் குவாரிகள் தொடங்குவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான பொதுமக்களின் கருத்து கேட்புக் கூட்டம், வியாழக்கிழமை நடைபெற்றது. கீழ்பென்னாத்தூா் வட்டம் ஐங்குணம் கி... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.14.42 கோடியில் புனரமைக்கப்பட்ட ரயில் நிலையங்கள் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில், ரூ.14.42 கோடியில் புனரமைக்கப்பட்ட திருவண்ணாமலை மற்றும் போளூா் ரயில்நிலையத்தை பிரதமா் மோடி காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இந்தியா முழுவதும் 103 ரயில் ... மேலும் பார்க்க

கோடை விழாவை மக்கள் பயன்பெறும் வகையில் நடத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

ஜவ்வாதுமலை கோடை விழாவை மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா். ஜவ்வாதுமலையில் கோடை விழாவை சிறப்பாக நடத்துவது தொடா்பான முதல்க... மேலும் பார்க்க