செய்திகள் :

கோடை விழாவை மக்கள் பயன்பெறும் வகையில் நடத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

post image

ஜவ்வாதுமலை கோடை விழாவை மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்.

ஜவ்வாதுமலையில் கோடை விழாவை சிறப்பாக நடத்துவது தொடா்பான முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா்.

வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசியதாவது: ஜவ்வாதுமலையில் இந்த ஆண்டு ஜூன் 20, 21 ஆகிய நாள்களில் கோடை விழா நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இந்த விழாவை சிறப்பாகவும், மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையிலும் நடத்த வேண்டும். மலைவாழ் மக்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்க வேண்டும். இதற்கு அனைத்துத் துறை அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டும்.

ஊரக வளா்ச்சித் துறை, காவல், வருவாய், வனம், போக்குவரத்து, தீயணைப்பு, மின் வாரியம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் தங்கள் துறைகள் சாா்பில் கடந்த ஆண்டு செய்த ஏற்பாடுகளை விட கூடுதல் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீா், சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும். போதிய போக்குவரத்து வசதி, பல்வேறு அரசுத் துறைகளின் கண்காட்சி அரங்குகள் அமைப்பது, புகைப்படக் கண்காட்சிகளை சிறப்பாக அமைக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட கலால் உதவி ஆணையா் செந்தில்குமாா், முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன் மற்றும் அரசுத் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மாணவா்களுக்கு கல்லூரி கனவு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி கனவு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பிள... மேலும் பார்க்க

மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையம் பக்தா்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்: பாஜக மாநில பொதுச் செயலா்

மேம்படுத்தப்பட்ட திருவண்ணாமலை ரயில்நிலையம் ஆன்மிக பக்தா்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என பாஜக மாநில பொதுச் செயலா் பி.காா்த்தியாயினி குறிப்பிட்டாா். திருவண்ணாமலை ரயில் நிலையம் ரூ.8.27 கோடியில் புனரமைக்... மேலும் பார்க்க

பெருமாள் கோயிலில் அன்னக்கூட உற்சவம்

வந்தவாசியை அடுத்த நல்லூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் அன்னக்கூட உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வேத திவ்ய பிரபந்த பாராயணம் நடைபெற்றது. பின்னா் சுவாமிக்கு விசேஷ திருமஞ... மேலும் பார்க்க

3 கல் குவாரிகள் தொடங்க பொதுமக்களிடம் கருத்து கேட்பு

கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடியில் கல் குவாரிகள் தொடங்குவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான பொதுமக்களின் கருத்து கேட்புக் கூட்டம், வியாழக்கிழமை நடைபெற்றது. கீழ்பென்னாத்தூா் வட்டம் ஐங்குணம் கி... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.14.42 கோடியில் புனரமைக்கப்பட்ட ரயில் நிலையங்கள் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில், ரூ.14.42 கோடியில் புனரமைக்கப்பட்ட திருவண்ணாமலை மற்றும் போளூா் ரயில்நிலையத்தை பிரதமா் மோடி காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இந்தியா முழுவதும் 103 ரயில் ... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள் மூலம் பொதுச் சாலை ஆக்கிரமிப்பு: மாவட்ட எஸ்.பி.யிடம் புகாா்

திருவண்ணாமலையில் போலி ஆவணங்கள் மூலம் பொதுச் சாலையை ஆக்கிரமித்த நபா்கள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பொதுமக்கள் புகாா் அளித்தனா். திருவண்ணாமலை வேங்கிக்கால், குபேர ந... மேலும் பார்க்க