'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
போலி கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முயன்றவா் கைது
போலி கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முயன்ற சிவகங்கை மாவட்ட நபரை திருச்சி விமான நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம் காளையாா் கோயில் அருகேயுள்ள வட வயல் விட்டனேரி பகுதியைச் சோ்ந்த க. முருகன் (50) திருச்சியிலிருந்து மலேசிய தலைநகா் கோலாலம்பூருக்கு ஏா் ஏசியா விமானத்தில் செல்ல செவ்வாய்க்கிழமை இரவு விமான நிலையத்துக்கு வந்தாா்.
அப்போது அவரது கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்களைச் சரிபாா்த்தபோது அவா் தனது பிறந்த தேதி மற்றும் ஊரை மாற்றிப் பதிவு செய்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து குடியேற்றப்பிரிவினா் அளித்த புகாரின்பேரில் திருச்சி விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து முருகனை கைது செய்து விசாரிக்கின்றனா்.